||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – மே 27
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
வைகாசி ~ 14 (27.5.2024) திங்கள் கிழமை
வருடம் ~ க்ரோதி வருடம் {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ வைகாசி மாஸம் { வ்ருஷப மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 5.04 pm வரை சதுர்த்தி பின் பஞ்சமி
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ 10.34 am வரை பூராடம் பின் உத்திராடம்
யோகம் ~ சுபம்
கரணம் ~ பாலவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
அசுபயோகம்
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.to 10.30 am 5 to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 5.52
சந்திராஷ்டமம் ~ 4 .22 pm வரை ரிஷபம் பின் மிதுனம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ . சதுர்த்தி
இன்று ~
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (27-05-2024) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் ஏற்படும். வியாபார ஒப்பந்தம் சாதகமாக அமையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்பு உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : செல்வாக்கு உயரும்.
பரணி : துரிதம் உண்டாகும்.
கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
நினைத்த பணிகளில் தடைகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களின் ஆலோசனைகளால் மனதில் மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். வேலை ஆட்களால் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். எதிலும் முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : தடைகள் நீங்கும்.
ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களால் உற்சாகம் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை புரிந்து கொள்வீர்கள். இறைப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனதளவில் சில தெளிவுகள் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
திருவாதிரை : அனுபவம் ஏற்படும்.
புனர்பூசம் : தெளிவுகள் பிறக்கும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
மனதளவில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய அனுபவங்களால் புத்துணர்ச்சி உண்டாகும். நீண்ட நாள் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : சங்கடங்கள் விலகும்.
பூசம் : நன்மை ஏற்படும்.
ஆயில்யம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் தனித்திறமை வெளிப்படும். விளையாட்டு விஷயங்களில் பொறுமை வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மாற்றம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : புரிதல் மேம்படும்.
பூரம் : அலைச்சல் அதிகரிக்கும்.
உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். தந்தை வழி உறவுகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படும். அரசு வழியிலான செயல்களில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் மேம்படும். அலுவலகத்தில் உழைப்புக்கான மதிப்பு கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சஞ்சலம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
அஸ்தம் : தாமதம் உண்டாகும்.
சித்திரை : சஞ்சலம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
தனித்து செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். வியாபார நெருக்கடிகள் குறையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வாகனம் மாற்ற எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்
சித்திரை : நினைத்ததை முடிப்பீர்கள்.
சுவாதி : நெருக்கடிகள் குறையும்.
விசாகம் : பாராட்டு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். இறை பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபார விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். பேச்சுக்களில் பொறுமையை கையாளவும். அதிகாரிகளிடத்தில் மதிப்பு உயரும். அதிரடியான செயல்களின் மூலம் சில மாற்றங்கள் பிறக்கும். சிந்தனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
விசாகம் : புரிதல் ஏற்படும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : மாற்றங்கள் பிறக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபார பணிகள் மெதுவாக நடைபெறும். பணி சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மூலம் : குழப்பம் ஏற்படும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். கருத்துகளை பகிர்வதில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனை கிடைக்கும். உடனிருப்பவர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். பணி நிமித்தமான செயல்களில் விழிப்புணர்வுடன் இருக்கவும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
உத்திராடம் : படபடப்பு நீங்கும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : விழிப்புணர்வுடன் இருக்கவும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
உறவினர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். மாற்றமான அணுகுமுறையால் நன்மை அடைவீர்கள். வியாபார விருத்திக்கான சூழல் அமையும். இழுபறியான வரவுகள் குறித்த சிந்தனை மேம்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திறமை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அவிட்டம் : நெருக்கடியான நாள்.
சதயம் : விருத்தி உண்டாகும்.
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். அரசு சார்ந்த செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் உண்டாகும். மனை சார்ந்த தொழிலில் லாபம் அடைவீர்கள். தனவரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ரேவதி : லாபகரமான நாள்.
தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6
ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
விளக்கவுரை
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
It’s going to be ending of mine day, however before end I am reading this enormous post to improve
my know-how.