தினசரி தொழுகை செய்யும் போது அரசுக்கு எதிரான எதிர்மறைப் பிரசாரம் என்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று கேள்விகள் எழுப்பப் படுகின்றன.
இஸ்லாமியர்கள் ஆன்மிக கடமையாக ஐந்து வேளை தொழுவது என்பது கட்டாயம். அதே நேரம், ஜமாத்களில் அந்தத்தொழுகை நேரத்தில் அரசுக்கு எதிரான பிரசாரங்களைச் செய்வதற்கு மதக் கடமை எனும் பெயரில் தூண்டப் படுகிறார்கள் என்பது சமூக அமைதிக்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்று கேள்வி எழுப்புகிறார்கள் பலர்.
சமூக வலைத்தளங்களில் ஒரு கடிதமும், அது தொடர்பான கருத்துகளும் இப்போது நடுநிலைவாதிகளால் பகிரப் பட்டு வருகின்றன. இஸ்லாமிய மதவெறி எவ்வாறு இந்த நாட்டில் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கிறது என்பதையும் பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர். மத ரீதியாக நாட்டின் மக்களைப் பிளவுபடுத்தும் இது போன்ற பிரிவினைவாதிகளின் கருத்துகளில் உள்ள ஆபத்தையும் சுட்டிக் காட்ட தவறுவதில்லை!
இது குறித்த ஓரிரு பதிவுகள்….
நான் எப்போதுமே என் நண்பர்கள் மத்தியில் பேசுவது இதைத் தான் .
முஸ்லிம்களும், கிருத்துவர்களும், அவர்கள் சார்ந்திருக்கும் லோக்கல் ஜமாத் / சர்ச் இவைகளை மீறி தனி மனிதனாக எதையுமே செய்து விட முடியாது ..
ஏன்னா, சுன்னத் / ஞானஸ்நானம், திருமணம், இறந்தோர் கிரியை (இடுகாட்டில் இடம்) வரை சிறுபான்மையினர் இவைகளை நம்பியே உள்ளனர் ..
இவைகளே ஒவ்வொரு தனி மனிதன் போடும் ஓட்டுக்களையும் கட்டாயப்படுத்தி நிர்ணயம் செய்கின்றன, என்பதும் மறுக்க முடியாத உண்மை..
என்ன பாதிப்பு என்று கூட தெரியாமல் ஜமாத்தில் ஒரு மூடர் கூடத்தை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்.
#கருத்துச்சுதந்திரமும்_இஸ்லாமும்
மாற்றுக் கருத்து உள்ளவர்கள் ஜமாத்தில் இருந்து தாங்களாகவே நீங்க வேண்டும் ( அல்லது நீக்கப்படுவார்கள்! ) என்ற அறிவிப்பும், தினசரி தொழுகையின் போது CAA பற்றி எதிர்மறைப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளும் சமூக அமைதிக்கு எவ்வளவு பெரிய ஆபத்து !
மாற்றுக் கருத்து உள்ளவர்கள் ஜமாத்தில் இருந்து தாங்களாகவே நீங்க வேண்டும் ( அல்லது நீக்கப்படுவார்கள்! ) என்ற அறிவிப்பும், தினசரி தொழுகையின் போது CAA பற்றி எதிர்மறைப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளும் சமூக அமைதிக்கு எவ்வளவு பெரிய ஆபத்து !