தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருப்பதாலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதாலும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் குறைந்து வருகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 43 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.78.88 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.74.99 காசுகளாக உள்ளது.
இந்தியா பெட்ரோல் இறக்குமதி செய்கிறது. அமெரிக்க அதிபர் ஈரான் இறக்குமதியை தடை செய்ய முயற்சித்தார். அதனால் உலக சந்தையில் விலை ஏறியது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி. அடைந்தது இப்போது அமெரிக்கா அப்படிச் செய்ய வில்லை. எரிபொருள் விலை குறைகிறது. இந்தியா, ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்ய, இந்திய ரூபாய் பரிவர்த்தனையை செய்ய முடிவு செய்தது. தற்போதுஉற்பத்தி வரியில் 2.50 ரூபாய் மத்திய அரசு குறைத்தது. இதற்கு சமமாக சில மாநிலங்களும் தங்கள் வரியைக் குறைத்த்ன. பொது மக்களும் பைக் கார் உபயோகத்தை குறைத்து பெட்ரோல் சிக்கனம் கடை பிடித்தால், மேலும் விலை குறையும் என்கிறார்கள் வல்லுனர்கள்.
இதனிடையே, வரும் டிசம்பருக்குள் பெட்ரோல் விலை ரூ.70க்குள் வந்துவிடும் என்கிறார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளவை…
கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 5/- ரூபாய்க்கும் அதிகமாக குறைந்துள்ளது. இவை டிசம்பர் இறுதிக்குள் பெட்ரோல் விலை₹.70/- க்கும் டீசல் ₹.67/- க்கும் கீழ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. pic.twitter.com/GEgDpepa27
— H Raja (@HRajaBJP) November 22, 2018