சிறையில் மாட்டுத் தோலை சுத்தம் செய்ய வைத்து _ தொழுநோய்க்கு ஆட்பட்டு , அதன்பின்பும் அதே வேதனையுடன் _ வெள்ளையர்களின் , அரசு ரயிலில் ஏற அனுமதி மறுத்து, கால்நடையாகவே நடந்து சென்று சுதந்திரக் கனலைப் பரப்பியவர் நமது சுப்பிரமணியன் சிவாவின் வீடு ,
வத்தலக்குண்டு அக்ரஹாரத்தில் பாழடைந்து கிடக்கிறது!
அந்தக் காலத்திலேயே பாப்பாரபட்டியில் அவர் கட்ட நினைத்த பாரதமாதா கோவில் இன்று வரை கட்டப்படவேயில்லை – அவர் பிறந்த வத்தலக்குண்டு மண்ணில் அந்த மாவீரனுக்கு ஒரே ஒரு சிலை கூட இல்லை – எவ்வளவு முயற்றி செய்தும் , கடைசிவரை பாரதமாதாவுக்கு கோயில் கட்ட முடியவில்லையே என்ற மனவேதனையிலேயே இறந்து போனார்.
இவரைத்தான் நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் வீரத்துறவி என்று தமது பேச்சிலே குறிப்பிட்டார் . ஆனால் சுதந்திரத்தை எதிர்த்தும் , சுதந்திரதினத்தை துக்கநாளென்றும் கூறி , தமிழையும், தமிழனையும் காட்டுமிராண்டிகள் என்று சொன்ன – கன்னடன் ஈ.வே. ராமசாமிக்கு தமிழகம் எங்கும் சிலைகள் – சென்னையில் மட்டும் 29 சிலைகள்!
எங்கள் ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதன் சொந்த இடத்தில் ராஜகோபுரத்திற்கு எதிரில் கூட சிலை – தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜனுக்கு எதிரிலேயே சிலை – இது போதாதென்று அவன் முறை தவறி சாகும் தருவாயில் மணம் முடித்த மணியம்மைக்குக் கூட எழும்பூரில் சிலை!
அவ்வளவு ஏன் – தமிழகத்தில் இந்துக்களையும், இந்துக் கோவில்களையும் கொன்று குவித்த _ திப்பு சுல்தானுக்கும், ஹைதர் அலிக்கும், திண்டுக்கல் மாநகரில் குளத்தை ஆக்ரமித்து மணிமண்டபம் !
அதற்கு ஒரு SI – இரு காவலர்கள் இரவு பகலாக பாதுகாப்பு நமது வரிப்பணத்தில் – நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குக் கோபம் வருகிறது!
இந்த நாட்டை 50 வருடங்கள் ஆண்ட திராவிட கட்சிகளின் துரோகங்களை நினைத்தால் – இனிமேலாவது இந்த மண்ணில் உண்மையான தேசத் தியாகிகளை மதித்து மரியாதை செய்யும் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் – என்று, சபதமேற்போம் – பாரதமாதா வாழ்க!
- ந.முத்துராமலிங்கம்