சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி சூளைமேடு வன்னியர் தெரு பிள்ளையார் கோயில் அருகே தேசிய வாக்காளர் பேரவை சார்பாக ஹிந்து விரோத கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று 4, 5 பொதுமக்கள் நோட்டீஸ் விநியோகித்துக் கொண்டிருந்தனர். அதனால் ஆத்திரமடைந்த 40க்கும் மேற்பட்ட திமுகவினர் கும்பலாக திரண்டு தாக்கியுள்ளனர்.
மக்களாட்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனைத்துத் தரப்பினருக்கும் உரிமையுண்டு. அதில் பதிலளித்து எதிர் பிரசாரத்தில் ஈடுபடவும் அவதூறு, ஆபாசம் ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளிக்கவும் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு உரிமையுண்டு. அதை விடுத்து சட்டத்தைக் கையிலெடுப்பது கருத்து சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது.
ரவுடிகளின் கட்சியான திமுக வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையானது தான். ஹிந்து விரோத திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகளுக்கும் பொறுக்கிகளுக்கும் தான் விடியல் தரும்.
- பிரவீண்குமார்