உங்கள் செக்யூலரிஸ பைத்தியத்தில் எங்கள் உணர்வுகளைக் கொல்லாதீர்கள்!

tmkrishna - 2026

கர்நாடக வித்வான்கள் கவனத்திற்கு… கர்நாடக சங்கீத வித்வான்கள் வேண்டியதை/வேண்டியவர்களைப் பாடிக் கொள்ளுங்கள். உங்களுக்கு அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் தியாகராஜ ஆராதனைக்கு வராதீர்கள். மடங்களின் ஆஸ்தான வித்வான்/விதூஷி பட்டங்களைத் துறந்துவிடுங்கள். எதற்கு மடங்களுக்கு அவமரியாதை? பேசுவது மானம் இடைப் பேணுவது காமம் என்பது வேண்டாம்.

இனி சங்கீத சாம்ராட், சங்கீத சிரோன்மணி, என்று பட்டங்களைச் சமயப் பெரியவர்கள் அளிக்கும் முன் ஏதாவது ஒப்புதல் வாங்கிக் கொண்டு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ‘அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே’ என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை சங்கீத உலகின் பதிவ்ரதா பாவமும்.

இசை என்பது ஏதோ ஸ்வர, தாள ஸங்கமம் மட்டும் அன்று. இசை இறைப்பணி. இறை மாற்றமுடியாதது. பாடப்பட்டவரும் மாற்றப்பட முடியாதவர். மாற்றிக் கொண்டிருக்க கர்நாடக சங்கீதம் மைக்கேல் ஜாக்ஸனின் காக்காய் வலிப்புச் சத்தங்கள் இல்லை.

ஆழ்வார்களின் பாடல்களைக் கேட்க வேண்டும் என்று பெருமாள் காத்திருந்து கேட்டுள்ளார். திரு இந்தளூர் பாசுரத்தில் பெருமாள் எழுந்து வரவில்லை என்பதால் ‘வாழ்ந்தே போம் நீரே’ என்று ஆழ்வார் வெளியேறிச் செல்ல, பெருமாள் எழுந்து வந்து ‘உம் பாசுரத்தைக் கேட்கவே கண்மூடிச் சயனித்திருந்தேன்’ என்று சொன்னது உண்மை.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

திருவழுந்தூரில் திருமங்கையாழ்வார் பெருமாளை யாரோ அரசன் என்று எண்ணிப் பாடாமல் செல்ல, பெருமாள் பூ மாலையினால் ஒரு விலங்கை உருவாக்கி ஆழ்வாரின் கால்களைக் கட்டி மேலே செல்லாமல் செய்தான். விளைவு ‘தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ’ என்னும் பாசுரம்.

இங்கு ஆழ்வார் சன்னிதி கோவிலுக்குள் இல்லாமல் வெளியே உள்ளது. ஆழ்வார் கோவில் என்று ஒன்று ஏற்பட்டு பிரபந்த பாராயணங்கள் அங்கிருந்தே துவங்குகின்றன. ஆழ்வார் வாக்கைக் கேட்கப் பெருமாள் திருவுள்ளம் கொண்டதால் பல பாசுரங்கள் கிடைக்கப்பெற்றன. ‘பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் / விரித்துக் கொள்’ பாசுரங்களில் ஆழ்வாரின் வாக்கிற்கிணங்க பெருமாள் நடக்கிறான். திருவரங்கத்தில் பெருமாளே மணவாள மாமுனிகளிடம் செய்யுள் கேட்டுள்ளார்.

இவற்றை நம்பிக்கை என்று புறந்தள்ளலாம். ஆனால், நம்புபவர்கள் மட்டுமே பாட வேண்டும். கர்நாடக வித்வான்களே, நீவீர் யாரையும் பாடுங்கள், என்ன வேண்டுமானாலும் செய்து போங்கள். உங்கள் செக்யூலரிஸ பைத்தியத்தில் எங்கள் நுண் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்.

எச்சரிக்கையெல்லாம் இல்லை. வேண்டுகோள். பாகவத அபசாரம் மஹா பாவம். அவ்வளவுதான். இதிலும் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் உங்கள் ப்ராரப்த கர்மா என்று நினைத்து உங்களுக்காகப் பிரார்த்தனை செய்வது தான் என்ன்னால் முடிந்த செயல்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

– ஆமருவி தேவநாதன் (கட்டுரையாளர், விமர்சகர், எழுத்தாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories