December 5, 2025, 12:52 PM
26.9 C
Chennai

தமிழை அழிக்கும் கிறிஸ்துவ அஜண்டா! விஜய் டிவி., செய்யும் துணிகர திணிப்பு வேலை!

vijaytvprogram - 2025மொழி – ஒரு இனத்தின் / ஒரு குழுவின் கலாசாரத்தையும் அதன் பெருமையையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் கண்ணாடி. உலகில் பல மொழிகள் இருந்துள்ளன. சில இருக்கின்றன. ஆனால், உலகின் மிக மூத்த நாகரிகங்கள் என்று கருதப் படும் நம் நாட்டின் நாகரிகங்கள் இன்றளவும் புரிந்து கொள்ளப் படக் காரணமாக இருப்பவை நம் மொழிகளே!

நம் நாட்டிலும் பல மொழிகள் உள்ளன அவற்றில் இன்றளவும் சீர் இளமைச் செந்தமிழ் என்று போற்றப் படுகிறது தமிழ் மொழி! அதற்குக் காரணம், நம் தமிழ் மொழி இன்றளவும் அதே இளமைப் பொலிவுடன் திகழ்வதுதான்! அதென்ன இளமைப் பொலிவு?

ஆயிரம் வருடம் முன் உதித்த நூல்களை இன்றும் நாம் படித்து புரிந்து கொள்கிறோம். இரண்டாயிரம் வருடம் முந்தைய திருக்குறள் முதலான இலக்கியங்களை நாம் இன்றளவும் புரிந்து கொள்கிறோம். அதற்கு முன்னுள்ள சங்க அக புற இலக்கியங்கள் எல்லாம் நம் பாரம்பரியத்தை, பண்பாட்டைப் பறை சாற்றும் காலக் கண்ணாடிகளாய்த் திகழ்கின்றன. அவற்றின் மூலம் நம் தமிழ் மூதாதையர்கள் எப்படி இருந்தனர் என்று நாம் அறிந்து கொள்கிறோம்.

ஆனால், நம் தமிழை அழிக்கப் புகுந்த கிறிஸ்துவ சர்ச் அமைப்புகள், தமிழ் மூலமே அந்த இன அழிப்பு வேலையைச் செய்து வருகின்றன. அவற்றின் நீட்சியாகத்தான் தற்போது விஜய் டிவி.,யில் தமிழ் குறித்த ஒரு நிகழ்ச்சியை அமைத்து அதை பரவலாக்கியிருக்கின்றன.

ஒரு சமூகத்துக்கு அறிவு புகட்டுபவர் ஆசிரியர். அந்த ஆசிரியர் மூலம் மட்டுமே அடுத்தடுத்த சந்ததிகள் அறிவு வளர்ச்சி பெற்று தத்தம் சமூகத்தைப் பிரதிபலிக்கின்றன. ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் கிறிஸ்துவ மதம் பரப்பச் சென்ற பாதிரிகள், முதலில் அழித்தது அந்நாட்டு மக்களின் குருமார்களையும் கல்வி அறிவு பெறச் செய்த ஆசிரியர்களையும் தான்! அதன் பின்னர் அவர்களின் மொழியை அழித்து இன்று அவர்களின் இன அடையாளத்தையே அழித்து விட்டனர்.

அப்படி மொழி அழிப்பு அடையாளத்தைச் செய்யவே இங்கே பாதிரிகள் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர். இந்து இனக் குழுக்களின் குருமார்களை அழிப்பது, ஆசிரியர்களை அகற்றுவது, அவர்களின் மொழி இலக்கியங்களை அகற்றுவது இவை மூலம் தங்களது மதத்தை வலுவாக்க கிறிஸ்துவ மிஷனரிகளின் சூழ்ச்சி முயற்சியே, விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகள் என குற்றம் சொல்லுகின்றனர் இந்து இயக்கத்தினர்.

vijaytvprogram1 - 2025

அதற்கு சான்றாக, ஒரு சில நபர்களை தயார் செய்து, தாங்கள் தமிழே வாசிகக்த் தெரியாதது போலும், தமிழர்களின் வாரிசுகள் தமிழ்ப் படிக்கத் தெரியாது திண்டாடுவது போலும், அவர்களுக்கு தொடர்பு மொழியாக ஆங்கிலமே போதும் என்பது போலும், மற்ற மொழிக்காரர்கள் வியாபார ரீதியாக காலூன்றும் பொருட்டு தமிழை படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கருத்தைத் திணிக்கச் செய்வது போலும் ஒரு நிகழ்ச்சியை நீயா நானா என்ற பகுதி மூலம் நடத்தியது விஜய் டிவி.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்தாலேயே இந்த மறைமுக செயல்திட்டம் நமக்குப் புரிந்து விடும். ஆனால், இதன் உண்மைத் தன்மை தெரியாமல் பலரும் சமூக வலைத்தளங்களில் வேறு வகையில் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்லப் போனால், தமிழ்நாட்டின் கிராமம், நகரம் என ஒன்றுவிடாமல், ஆங்கிலமே எவராலும் புரிந்து கொள்ளப் பட முடியாத நிலையில் இருக்கின்றது புலப்படும்! அதை மாற்றுவதற்கான முயற்சிதான் விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சி!

இந்த நிகழ்ச்சி குறித்த சமூக வலைத்தளக் கருத்துகளில் ஒன்று…

குஜராத்தி, மராட்டி வந்தேறி சமூகமெல்லாம்… திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது வரைக்கும், தமிழ்ல பூந்து விளையாடுறாங்க. நம்ம வாட்ஸ்ஆப் தமிழன்…  வெக்கமே இல்லாம, அதுக்கும் ஏதோ பெரிய ஜோக்க கேட்டது மாதிரி சிரிச்சுட்டு உக்காந்திருக்கான். ஒரு மூதேவி… “கம்யூனிகேசனுக்கு, தமிழ் தெரிஞ்சுக்கணும்ற அவசியமில்ல. இங்கிலீஸ வெச்சு மேனேஜ் பண்ணிக்குவேன்”னு, பெருமையடிக்குது. முதல்ல அவங்களோட அந்த ‘ழ’ கர உச்சரிப்புக்கு பதில் சொல்லுங்கடா.

‘என்னோட மொழி எனக்கு தெரில’ன்னு, பெருமையா சொல்றது எப்டி இருக்கு தெரியுமா ? ‘என்னோட அப்பா பேர் தெரில’ன்னு, சொல்ற மாதிரியிருக்கு. த்தூ… !!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories