தமிழை அழிக்கும் கிறிஸ்துவ அஜண்டா! விஜய் டிவி., செய்யும் துணிகர திணிப்பு வேலை!

vijaytvprogram - 2026மொழி – ஒரு இனத்தின் / ஒரு குழுவின் கலாசாரத்தையும் அதன் பெருமையையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் கண்ணாடி. உலகில் பல மொழிகள் இருந்துள்ளன. சில இருக்கின்றன. ஆனால், உலகின் மிக மூத்த நாகரிகங்கள் என்று கருதப் படும் நம் நாட்டின் நாகரிகங்கள் இன்றளவும் புரிந்து கொள்ளப் படக் காரணமாக இருப்பவை நம் மொழிகளே!

நம் நாட்டிலும் பல மொழிகள் உள்ளன அவற்றில் இன்றளவும் சீர் இளமைச் செந்தமிழ் என்று போற்றப் படுகிறது தமிழ் மொழி! அதற்குக் காரணம், நம் தமிழ் மொழி இன்றளவும் அதே இளமைப் பொலிவுடன் திகழ்வதுதான்! அதென்ன இளமைப் பொலிவு?

ஆயிரம் வருடம் முன் உதித்த நூல்களை இன்றும் நாம் படித்து புரிந்து கொள்கிறோம். இரண்டாயிரம் வருடம் முந்தைய திருக்குறள் முதலான இலக்கியங்களை நாம் இன்றளவும் புரிந்து கொள்கிறோம். அதற்கு முன்னுள்ள சங்க அக புற இலக்கியங்கள் எல்லாம் நம் பாரம்பரியத்தை, பண்பாட்டைப் பறை சாற்றும் காலக் கண்ணாடிகளாய்த் திகழ்கின்றன. அவற்றின் மூலம் நம் தமிழ் மூதாதையர்கள் எப்படி இருந்தனர் என்று நாம் அறிந்து கொள்கிறோம்.

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

ஆனால், நம் தமிழை அழிக்கப் புகுந்த கிறிஸ்துவ சர்ச் அமைப்புகள், தமிழ் மூலமே அந்த இன அழிப்பு வேலையைச் செய்து வருகின்றன. அவற்றின் நீட்சியாகத்தான் தற்போது விஜய் டிவி.,யில் தமிழ் குறித்த ஒரு நிகழ்ச்சியை அமைத்து அதை பரவலாக்கியிருக்கின்றன.

ஒரு சமூகத்துக்கு அறிவு புகட்டுபவர் ஆசிரியர். அந்த ஆசிரியர் மூலம் மட்டுமே அடுத்தடுத்த சந்ததிகள் அறிவு வளர்ச்சி பெற்று தத்தம் சமூகத்தைப் பிரதிபலிக்கின்றன. ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் கிறிஸ்துவ மதம் பரப்பச் சென்ற பாதிரிகள், முதலில் அழித்தது அந்நாட்டு மக்களின் குருமார்களையும் கல்வி அறிவு பெறச் செய்த ஆசிரியர்களையும் தான்! அதன் பின்னர் அவர்களின் மொழியை அழித்து இன்று அவர்களின் இன அடையாளத்தையே அழித்து விட்டனர்.

அப்படி மொழி அழிப்பு அடையாளத்தைச் செய்யவே இங்கே பாதிரிகள் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர். இந்து இனக் குழுக்களின் குருமார்களை அழிப்பது, ஆசிரியர்களை அகற்றுவது, அவர்களின் மொழி இலக்கியங்களை அகற்றுவது இவை மூலம் தங்களது மதத்தை வலுவாக்க கிறிஸ்துவ மிஷனரிகளின் சூழ்ச்சி முயற்சியே, விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகள் என குற்றம் சொல்லுகின்றனர் இந்து இயக்கத்தினர்.

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

vijaytvprogram1 - 2026

அதற்கு சான்றாக, ஒரு சில நபர்களை தயார் செய்து, தாங்கள் தமிழே வாசிகக்த் தெரியாதது போலும், தமிழர்களின் வாரிசுகள் தமிழ்ப் படிக்கத் தெரியாது திண்டாடுவது போலும், அவர்களுக்கு தொடர்பு மொழியாக ஆங்கிலமே போதும் என்பது போலும், மற்ற மொழிக்காரர்கள் வியாபார ரீதியாக காலூன்றும் பொருட்டு தமிழை படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கருத்தைத் திணிக்கச் செய்வது போலும் ஒரு நிகழ்ச்சியை நீயா நானா என்ற பகுதி மூலம் நடத்தியது விஜய் டிவி.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்தாலேயே இந்த மறைமுக செயல்திட்டம் நமக்குப் புரிந்து விடும். ஆனால், இதன் உண்மைத் தன்மை தெரியாமல் பலரும் சமூக வலைத்தளங்களில் வேறு வகையில் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்லப் போனால், தமிழ்நாட்டின் கிராமம், நகரம் என ஒன்றுவிடாமல், ஆங்கிலமே எவராலும் புரிந்து கொள்ளப் பட முடியாத நிலையில் இருக்கின்றது புலப்படும்! அதை மாற்றுவதற்கான முயற்சிதான் விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சி!

இந்த நிகழ்ச்சி குறித்த சமூக வலைத்தளக் கருத்துகளில் ஒன்று…

குஜராத்தி, மராட்டி வந்தேறி சமூகமெல்லாம்… திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது வரைக்கும், தமிழ்ல பூந்து விளையாடுறாங்க. நம்ம வாட்ஸ்ஆப் தமிழன்…  வெக்கமே இல்லாம, அதுக்கும் ஏதோ பெரிய ஜோக்க கேட்டது மாதிரி சிரிச்சுட்டு உக்காந்திருக்கான். ஒரு மூதேவி… “கம்யூனிகேசனுக்கு, தமிழ் தெரிஞ்சுக்கணும்ற அவசியமில்ல. இங்கிலீஸ வெச்சு மேனேஜ் பண்ணிக்குவேன்”னு, பெருமையடிக்குது. முதல்ல அவங்களோட அந்த ‘ழ’ கர உச்சரிப்புக்கு பதில் சொல்லுங்கடா.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

‘என்னோட மொழி எனக்கு தெரில’ன்னு, பெருமையா சொல்றது எப்டி இருக்கு தெரியுமா ? ‘என்னோட அப்பா பேர் தெரில’ன்னு, சொல்ற மாதிரியிருக்கு. த்தூ… !!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories