கொள்ளு வடகம்
தேவையான பொருள்கள் :
கொள்ளு – ½ லிட்டர்,
மிளகாய் வற்றல் – 50 கிராம்,
வெந்தயம் – ½ ஸ்பூன்,
பெருங்காயத் தூள் – ¼ ஸ்பூன்,
வெள்ளைப் பூசணிக்காய்த் துண்டு – 1, தேவையான அளவு உப்பு.
செய்முறை :
கொள்ளை சுத்தப்படுத்திய முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் வெள்ளைப் பூசணி கீற்று, உப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல், வெந்தயம் சேர்த்து அரைத்து, வெயிலில் பாலிதீன் பேப்பரை விரித்து அதில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு காயவைக்கவும்.