நேற்று முன் தினம் காட்டுக்கு விளையாடச் சென்ற சிவகுமார் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் பதற்றமடைந்த தாய் பராசக்தி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் ஊர் முழுவதும் தேட ஆரம்பித்தார்.
வெகுநேரத்துக்குப் பிறகு நடுக்காட்டில் மகனது உடல் சடலமாகக் கண்டனர். சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். இதனைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்னர்.
அவரது பிணத்தைச் சுற்றி நிறைய ஆணுறைகள் கிடந்துள்ளது. இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் அப்பகுதியில் ஆண்கள் பெண்களைக் கூட்டி வந்து பாலியல் உறவுக் கொள்வது வாடிக்கை என்றும் அதை சிறுவன் பார்த்துவிட்டபடியால் சிறுவனை யாராவது இப்படிக் கொன்றிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். இதையடுத்து காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.