10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மொழி தாள்கள் இனி ஒரே தேர்வாக நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ” 11, 12 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு மொழிப்பாடங்களில் இருந்த இரண்டு தாள்கள் ஒரே தேர்வாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதேநிலையில் தான் 10ஆம் வகுப்பில் படிக்கின்ற மாணவர்களுக்கும் மொழித்தாள்கள் ஒரே தேர்வாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
11, 12 -ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு மொழிப்பாடங்களில் இருந்த இரண்டு தாள்கள் ஒரே தேர்வாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
— K.A Sengottaiyan (@KASengottaiyan) September 14, 2019
அதே நிலையில்தான் 10 -ம் வகுப்பில் படிக்கின்ற மாணவர்களுக்கும் மொழித்தாள்கள் ஒரே தேர்வாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. #TNGovt #TNEducation