இன்னும் சிறிது நேரத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இருவரும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினர்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த போது, ஜெட்லிக்கு மத்திய அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டன. 2014ல் மோடி தலைமையிலான அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக அருண் ஜெட்லி பொறுப்பேற்றார். மே 2014 முதல் மே 2019 வரை, நிதித்துறை மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தார்.
2018ல் எய்ம்ஸ் மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அருண் ஜெட்லி, அந்த ஆண்டில் ஏப்ரல் முதல் அலுவலகம் வருவதை நிறுத்திக் கொண்டார். 2018ல் அருண் ஜெட்லிக்கு பதிலாக ரயில்வே அமைச்சராக இருந்த பியூஸ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்தார். பின்னர் மீண்டும் அதே ஆண்டில், ஆகஸ்ட் மாதம் நிதி அமைச்சர் பொறுப்பபை அருண் ஜெட்லி ஏற்றுக் கொண்டார்.
இதற்கிடையில் 2014 முதல் 2017 வரை பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 2014 முதல் 2016 வரை தகவல், தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். சமீபத்தில் நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக போட்டியிடவில்லை. மேலும் தனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம் என்றும் கட்சி மேலிடத்தில் தெரிவித்திருந்தார்.
Former Finance Minister Arun Jaitley is on Extracorporeal membrane oxygenation (ECMO) and Intra-aortic balloon pump (IABP) support, in critical stage at the All India Institute of Medical Sciences, Cardio-Neuro Centre, Delhi. On urge for dialysis to start: Sources at AIIMS pic.twitter.com/DAwx3ZGK1q
— ANI (@ANI) August 18, 2019