பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.
தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.
எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.
குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.
முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.
பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது
தோன்றும்….