கண், காது, மூக்குப் பிணிகளுக்கு….
வில்வ இலையை ஒரு பிடி எடுத்து, ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து பசும்பால் விட்டரைத்து தலைக்குத் தேய்த்து 3 மணி நேரம் ஊற விட்டு இளஞ்சூட்டு வெந்நீரில் குளிக்கவும். அவ்வப்போது இதனைச் செய்து வர கண், காது, மூக்கு பிணிகள் உண்டாகாது.
புன்னைப்பூவை நீரில் ஊற வைத்து அந்நீரைக் கொண்டு கண்களைக் கழுவி வந்தால் கண் வீக்கம், சொறி, சிரங்கு போகும்.
கர்ப்பப்பை கோளாறு நீங்க…
30 கிராம் இலவங்கப்பட்டையை அரைலிட்டர் நீர்விட்டுப் பாதியாகக் காய்ச்சி வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் காலையில் குடித்து வர கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். குழந்தை பிறந்த பின் சில நாள்களுக்கு இதைக் குடித்து வர கர்ப்பப்பை சுருங்கிப் பழைய நிலையடையும்.
சில பெண்களுக்கு வீட்டு விலக்கின் போது, வயிற்றில் வலி கண்டு தொல்லை ஏற்படுத்தும். மருந்து கடைகளில் பிரண்டை உப்பு கிடைக்கும். அதில் இரண்டு குன்றி மணியளவு எடுத்து வெண்ணெயில் குழைத்து நாள்தோறும் மூன்று வேளை சாப்பிட்டு வர இந்த வலி குணமாகும்.
மாத விலக்குக்கு முன்பும் பின்பும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டால் கல்யாண முருங்கை இலைச் சாற்றை காலையில் தொடர்ந்து பத்து நாள்கள் பருகி வர வயிற்று வலித் தொந்தரவு ஒழிந்து போகும்.
அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டால் அசோக மரப்பட்டை, மாதுளம் பழத்தோல், மாதுளம் வேர்ப்பட்டை சம அளவு எடுத்து உலர்த்தி தூள் செய்து தினமும் இரண்டு வேளை சிட்டிகையளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர இரண்டொரு வாரங்களில் கர்ப்பப்பை பலமடைந்து கருச்சிதைவு ஏற்படாது.
கற்றாழை நாற்றம் நீங்க…
பாசிப்பயறையும் வெந்தயத்தையும் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். வேப்பங்கொழுந்து, துளசி, திருநீற்றுப்பத்திரி இலை இம்மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து அந்த மாவுடன் கலந்து நாள்தோறும் உடம்பில் தேய்த்துக் குளித்து வர வியர்வையால் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும்.
கண், காது, மூக்குப் பிணிகளுக்கு….
வில்வ இலையை ஒரு பிடி எடுத்து, ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து பசும்பால் விட்டரைத்து தலைக்குத் தேய்த்து 3 மணி நேரம் ஊற விட்டு இளஞ்சூட்டு வெந்நீரில் குளிக்கவும். அவ்வப்போது இதனைச் செய்து வர கண், காது, மூக்கு பிணிகள் உண்டாகாது.
புன்னைப்பூவை நீரில் ஊற வைத்து அந்நீரைக் கொண்டு கண்களைக் கழுவி வந்தால் கண் வீக்கம், சொறி, சிரங்கு போகும்.
கர்ப்பப்பை கோளாறு நீங்க…
30 கிராம் இலவங்கப்பட்டையை அரைலிட்டர் நீர்விட்டுப் பாதியாகக் காய்ச்சி வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் காலையில் குடித்து வர கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். குழந்தை பிறந்த பின் சில நாள்களுக்கு இதைக் குடித்து வர கர்ப்பப்பை சுருங்கிப் பழைய நிலையடையும்.
சில பெண்களுக்கு வீட்டு விலக்கின் போது, வயிற்றில் வலி கண்டு தொல்லை ஏற்படுத்தும். மருந்து கடைகளில் பிரண்டை உப்பு கிடைக்கும். அதில் இரண்டு குன்றி மணியளவு எடுத்து வெண்ணெயில் குழைத்து நாள்தோறும் மூன்று வேளை சாப்பிட்டு வர இந்த வலி குணமாகும்.
மாத விலக்குக்கு முன்பும் பின்பும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டால் கல்யாண முருங்கை இலைச் சாற்றை காலையில் தொடர்ந்து பத்து நாள்கள் பருகி வர வயிற்று வலித் தொந்தரவு ஒழிந்து போகும்.
அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டால் அசோக மரப்பட்டை, மாதுளம் பழத்தோல், மாதுளம் வேர்ப்பட்டை சம அளவு எடுத்து உலர்த்தி தூள் செய்து தினமும் இரண்டு வேளை சிட்டிகையளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர இரண்டொரு வாரங்களில் கர்ப்பப்பை பலமடைந்து கருச்சிதைவு ஏற்படாது.
கற்றாழை நாற்றம் நீங்க…
பாசிப்பயறையும் வெந்தயத்தையும் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். வேப்பங்கொழுந்து, துளசி, திருநீற்றுப்பத்திரி இலை இம்மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து அந்த மாவுடன் கலந்து நாள்தோறும் உடம்பில் தேய்த்துக் குளித்து வர வியர்வையால் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும்.