காசம் சரியாக (ஆஸ்துமா)
தூதுவளை இலைகளில் முட்களை நீக்கி மசிய அரைத்து மூன்று எலுமிச்சங்காயளவு எடுத்து அதே அளவு பசுவெண்ணெய் கலந்து, அரிசித் திப்பிலி, ஓமம், கடுக்காய் வகைக்கு 10 கிராம் தூள் செய்து எல்லா வற்றையும் ஒரு சட்டியில் போட்டு காய வைத்து மருந்துகள் சிவந்து வரும் போது இறக்கி அதிலுள்ள நெய்யை மட்டும் இறுத்து வைத்துக் கொண்டு காலை, மாலை ஒரு ஸ்பூன் விதம் 40 நாள்களுக்கு சாப்பிட்டு வர பூரண குணம் தெரியும்.
கபக்கட்டு சரியாக…
துளசி இவையை கசக்கிப் பிழிந்து ஆழாக்கு சாறு எடுத்து 350 கிராம் கற்கண்டை தூள் செய்து அதில் கலந்து நீர் விட்டுக் காய்ச்சி சர்பத் பதத்திற்கு வந்ததும் இறக்கி காலை, மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர கபக்கட்டு நீங்கும்.
கண்டமாலை சரியாக…
சேர்கொட்டையை ஊசியில் குத்தி நல்வெண்ணெய் விளக்கில் காட்டினால் கருநிறமுடைய தைலம் வடியும் இதில் இரண்டு துளி மட்டும் எடுத்து 60 துளி தேன் கலந்து காலை மாலை சாப்பிட கண்டமாலை நோய் குணமாகும். சைவ உணவே உட்கொள்ள வேண்டும். கடலைப் பருப்பு, பாகற் காய், பூசணிக்காய், அகத்திக்கீரை. புளி, மோர், தயிர் இவற்றையும் நீக்கி விட வேண்டும்.
காக்காய் வலிப்புக்கு…
முருங்கை வேரை நீர் விடாமல் அரைத்து 20 கிரெயின் வீதம் பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர காக்காய் வலிப்பு நீங்கும்.
கால் ஆணி சரியாக…
மருதாணி இலை கால் தோலா, மஞ்சள் கால் தோலா, வசம்பு அரை தோலா, கற்பூரம் சேர்த்து நன்றாக அரைத்து இரவு படுக்கச் செல்லுமுன் காலாணி மீது வைத்துக் கட்டி வர பதினைந்து நாள்களில் ஆணி மறைந்து விடும்.
அம்மான் பச்சரிசி இலையை ஒடிக்க பால் வரும். அதனை கால் ஆணி மீது பூசி வர ஆணி மறையும்.