கர்ப்பிணி விக்கலுக்கு…
திப்பிலி, கடுக்காய், இஞ்சி சம எடை எடுத்து மூன்றையும், மை போல் அரைத்து ஆழாக்கு பசும்பாலில் கலந்து கொடுக்க விக்கல் நிற்கும்.
அஜீரணமா?
நெல்லி வற்றல். அஸ்வகந்தி சம எடை எடுத்து தூள் செய்து நெய்யும். தேனும் சேர்த்துக் குழைத்து காலை. மாலை சாப்பிட்டு வர அஜீரணக் கோளாறு நீங்கும்.
வாயுவை கண்டிக்க…
திப்பிலி, பெருங்காயம், மிளகு, சுக்கு, கழற்சிப் பருப்பு வகைக்கு 5 கிராம் இடித்து சலித்து வைத்துக் கொண்டு காலை, மாலை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட சகல வாயுவும் குணமாகும்.
மாரடைப்பு வராதிருக்க…
உணவில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ள இருதய நோய்கள் நெருங்காது.
கருச்சிதைவை தடுக்க…
மாதுளம் வேர்ப்பட்டை, அசோக மரப்பட்டை, மாதுளம் பழத்தோல் இவற்றைச் சம எடை எடுத்து உலர்த்தி தூள் செய்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை 15 நாள் ஒரு சிட்டிகையளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர கர்ப்பம் தங்கி அழகான குழந்தை பிறக்கும்.