இப்படிக்கு வங்கி காசாளர், என்ற பெயரில் சமூக வலைத் தளங்களில் பரவும் ஒரு செய்திதான் பலருக்கும் பகீர் என்று அதிர்ச்சி அளித்திருக்கிறது.
அன்றாடம் நாம் புழங்கும் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் இவற்றை கைகளில் படாமல் நாம் பயன்படுத்த முடியாது. கையால் எடுத்துக் கொடுக்கிறோம். எண்ணுகிறோம். நாணயங்களை வெகு நேரம் கைகளில் வைத்திருந்து அவற்றை பரிவர்த்தனைக்கு பயன்படுத்துகிறோம். பொருள்களை வாங்குகிறோம். ஆனால், அந்த நாணயங்கள் எப்படி எல்லாம், எங்கு எல்லாம் சுற்றிச் சுற்றி வந்து பின்னர் ஓர் இடத்தில் சேர்கிறது?
சிந்திக்க வைக்கும் அந்தப் பதிவு…
சாவு வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கிறோம். ஆனால் நம் சட்டைப் பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்?
அப்படியாக பரவும் அத்தகைய நாணயங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன. அதே நாணயங்கள்தான் கோயில்களின் உண்டியலிலும் போடப் படுகின்றன. சொல்லப் போனால், தூய்மையைப் பேணுவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் கோயில் கருவறை கற்பூரத் தட்டிலும் போடப் படுகிறது. அந்த நாணயத்தையும், பணத் தாள்களையும் கைகளால் தொட்டுவிட்டுதான் இறைவனுக்குப் படைக்கும் பூஜைப் பொருள்களையும், நிவேதனப் பொருள்களையும் பூஜாரிகள் தொட்டுச் செய்கிறார்கள்!
அடுத்தபடியாக மருத்தவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் , நாணயங்கள். “காய்ச்சல் சளி தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், H1N1, TB, இதர பால்வினை நோய்கள் ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுக்கள் மருத்துவமனை மூலம் பரவுகின்றன.
இதனாலேயே சில மருத்துவர்கள் இன்று அந்தந்த சிகிச்சைக்கான கட்டணத்தை தாங்கள் வாங்காமல் அவற்றை கம்பவுன்டர்களிடம் தர சொல்கிறார்கள். பின்னர் அவற்றை வங்கி சேமிப்புக்கணக்கில் கம்பவுண்டர்களையே deposit செய்யவும் சொல்கிறார்கள்.
சாக்கடை மற்றும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் பரவும் ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள். அதிக அளவில் பாக்டிரியாக்கள் வாழக்கூடிய அந்த நோட்டுக்கள் இன்று நம் சட்டைப்பையில். இயற்கையாகவே இந்த துப்புரவு பணியாளர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள். ஆனால் அவர்கள் மூலம் பரவும் நோட்டுக்களை பயன்படுத்தும் நாம்……….?
இறைச்சி கடையில் பரிமாறப்படும் பணம். இறைச்சியின் ரத்தத்தில் வாழும் பாக்டீரியாக்கள் மற்றும் தொற்று கிருமிகள் அப்படியே அந்த கடைக்காரர் மூலம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் பரவி இன்று நம் வீட்டு பீரோக்களில் பத்திரப்படுத்தப் படுகின்றன.
பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடத்தில் வாங்கப்படும் அத்தனை நாணயங்களும் நேரடியாக பேருந்து நடத்துனரிடம் தினந்தோறும் நேரடியாக தரப்படுகின்றன. அவர் தரும் நாணயங்கள் , நம் வீட்டில் புழங்கவில்லை என்று உறுதி அளிக்க எவராலும் முடியுமா?
பாக்டிரியாக்களை பையில் வைத்து கொண்டு திரிகிறோம். பரவும் அபாயத்தை மறக்கிறோம்.
மற்ற வளர்ந்த நாடுகளில் கரன்சியின் வாழ்நாள் 5 வருடம் தான். அதற்கு பிறகு அவற்றை எரித்து விடுவார்கள். ஆனால் நாம்?
இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே தான் போகும். இதிலிருந்து தப்புவதற்கு நடுத்தர வர்க்கத்தினரால் இயலாத காரியம்.
ஆனால் நாம் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்படலாம்.
நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாயில் வைப்பதை தவிர்க்கவும்.
எச்சில் தொட்டு பணத்தை எண்ணும் பழக்கத்தை அறவே விடவும்.
அன்றாடம் கைகளை நன்கு dettol மூலம் கழுவவும்
கரன்சி மூலம் பரவும் பாக்டிரியாக்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்வோம். பாடுபடுவோம்.