பொது சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு
நிபா தடுப்போம்!
1. சாலை ஓரங்களில் விற்கும் சுகாதாரமற்ற பழங்களை வாங்கி உண்ண வேண்டாம்.
2. வவ்வால், கிளி, அணில் போன்ற விலங்குகள்
கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம்.
3. பழங்களை நன்கு கழுவிய பின்பு உண்ண வேண்டும்.
4. காய்கறிகளை நன்கு வேக வைத்து உண்ண வேண்டும்
5. பறவைகள் மற்றும் விலங்குகளிடம் நெருங்கி பழக வேண்டாம்.
6. கைகளை சோப்பு நீரை கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்.
7. இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கோ, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ சென்று சிகிச்சை பெற்று கொள்ளவும்.
நிபாவை தடுக்க யாவரும் கைகோப்போம்