சூட்கேஸில் நண்பனை அமர்த்தி எடுத்துச் செல்லும் போது பிடிபட்ட மாணவன்.
ஹைதராபாத்:- ஃப்ளாட்டுக்குள் தன் நண்பனை அனுமதிக்கவில்லை என்பதால் ஒரு மாணவன் ஒரு திட்டம் போட்டான். மங்களூரில் உள்ள அந்த அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் அசோசியேஷன்காரர்கள் புதியவர்களையோ வெளி மனிதர்களையோ உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று ரூல் போட்டிருந்தார்கள்.
தன் நண்பனை தன் ஃப்ளாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மாணவன் எத்தனை வேண்டிக் கொண்டாலும் அவர்கள் கேட்கவில்லை.
அதனால் அந்த மாணவன் புத்திசாலித்தனம் என்று நினைத்துக்கொண்டு ஒரு திட்டம் தீட்டினார். ஒரு பெரிய சூட்கேசில் தன் நண்பனை அமர்த்தி வைத்து சூட்கேசை இழுத்துக்கொண்டேப்ளாட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என்று முயற்சித்தார்.
ஆனால் சூட்கேசில் இருந்த நண்பன் ஒழுங்காக உட்காராமல் அங்கும் இங்கும் அசையத் தொடங்கினார். அதை பார்த்த அசோசியேஷன் மனிதர்களுக்கு சந்தேகம் வந்தது. சூட்கேசை திறந்து பார்த்தார்கள். மாணவனின் திட்டம் வெளிப்பட்டு விட்டது. இதனால் போலீசாரை அழைத்தார்கள்.
போலீசார் வந்து அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள். இருவரின் பெற்றோரையும் அழைத்து பேசி அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவத்தின் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை.