மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தில்லி நோக்கிச் செல்லும் விவசாயிகளின் வாகனங்களுக்கு இலவச டீசல் வழங்குகின்றனர் சிரோமணி அகாலிதளம் கட்சியினர். அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர் தில்லி – அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையில் தில்லி நோக்கிச் செல்லும் போராட்டக்காரர்களின் வாகனங்களுக்கு இலவச டீசல் வழங்கி வருகிறார்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கும் எதிராக பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தில்லியில் கூடி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 14வது நாளை எட்டியுள்ளது. இருவாரங்களாக விவசாயிகள் தங்குவதற்கு குளிரில் தாங்கு வகையிலான டெண்ட்கள், குளிர் தெரியாமல் இருக்க மெத்தைகள் தலையணைகளுடன் படுக்கை வசதிகள், உணவு வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளன.
இந்த நிலையில் மத்திய அரசும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் ஐந்து கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திபோதும், எந்தவித உடன்பாடும் எட்டப்பட வில்லை. இருப்பினும் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இதனிடையே தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி அதிக அளவில் திரண்டு வருகின்றனர். அத்தகையவர்களுக்கு தில்லி – அமிர்தசரஸ் நெடுஞ்சாலையில் சிரோமணி அகாலி தள தொண்டர் இலவச டீசல் வழங்கி வருகிறார்.
இது குறித்து தகவல் தெரிவித்த சிரோமணி அகாலி தள தொண்டர் குருஷரன் சிங், போராட்டத்தில் கலந்துகொள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச டீசல் வழங்கிவருகிறேன் என்று கூறினார்.
Workers of Shiromani Akali Dal (SAD) are providing free diesel at a petrol pump at Delhi-Amritsar national highway on December 09. Farmers are heading to Delhi to join protest against Centre’s farm laws. Farmers’ agitation has entered 14th day.