தொடர்ந்து 2-வது ஆண்டாக உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து இமய மலைச் சிகரங்களைப் பார்க்க முடிகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.
வழக்கமாக இமயமலைக்கு அருகிலுள்ள மாநிலங்களில் இருந்து இமயமலையை காண முடியாது. பனிமூட்டம், காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் காண முடியாத நிலை இருந்தது.
ஆனால் கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்து உ.பி.யின் பல்வேறு நகரங்களில் இருந்து இமயமலைச் சிகரங்களைக் காண முடிந்தது.
இந்நிலையில் 2-வது ஆண்டாக தற்போது உ.பி.யின் சஹாரன்பூரில் இருந்து இமயமலைச் சிகரங்களை காண முடிகிறது.
இந்த நகரிலிருந்து இமயமலைச் சிகரங்கள் வெறும் கண்களால் பார்க்க முடிகிறது. உ.பி.யின் வேறு சில நகரங்களில் இருந்து இமயமலைச் சிகரங்கள் தெரிகின்றன.
சஹாரன்பூரைச் சேர்ந்த டாக்டர் விவேக் பானர்ஜி என்பவர் இந்த புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து விவேக் பானர்ஜி கூறும்போது, ‘இது ஓர் அரிய காட்சி. இமயமலை சிகரங்களை சஹாரன்பூர் வடக்குப் பகுதியில் இருந்து வெறும் கண்களிலேயே காண முடிகிறது. மிகவும் தெளிவாக சிகரங்கள் தெரிகின்றன. 30 முதல் 40 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற காட்சிகள் இங்கு தெரிந்ததாம்.
தற்போது அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுவால் அந்தக் காட்சிகள் தெரிவதில்லை. தற்போது சிகரங்கள் தெரிந்ததால் அதை படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன்’ என்றார்.
அரசு ஊழியரும், சஹரன்பூரைச் சேர்ந்த ஒரு அமெச்சூர் புகைப்படக் கலைஞருமான துஷ்யந்த் குமார் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ யிடம், மே 20 அன்று நகரத்திலிருந்து இமயமலையின் படங்களை கிளிக் செய்ததாக தெரிவித்தார்.
“சூரிய அஸ்தமன நேரத்தில், இமயமலையின் கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் பாண்டர்பஞ்ச் வீச்சு ஒளிரும் மற்றும் தெளிவாகத் தெரிந்தன. கடந்த ஆண்டும், ஏப்ரல் மாதத்தில் இந்த வீச்சு மலைகள் இங்கிருந்து தெரிந்தன. சஹரன்பூரிலிருந்து இமயமலையைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, ”என்று துஷ்யந்த் குமார் ANI இடம் கூறினார்.
Dushyant Kumar, a govt employee & an amateur photographer from Saharanpur says, he has clicked pictures of the Himalayas seen from Saharanpur on May 20, due to low pollution levels following continuous rainfall for the past few days pic.twitter.com/bbN48ifCX6
— ANI UP (@ANINewsUP) May 21, 2021
Himalayas are visible again from Saharanpur. After rains, the sky is clear and AQI is around 85.
— Ramesh Pandey (@rameshpandeyifs) May 20, 2021
PC: Dr Vivek Banerjee #lockdown pic.twitter.com/yR6buvfX6k
What a fabulous view of snowclad Upper Himalayas more than 150kms from Saharanpur city. Two days of heavy rains across North India after Cyclone Tauktae landfall ensured all pollution in air, mist and haze is gone.. PC Dr Vivek Banerjee. @rameshpandeyifs @paragenetics pic.twitter.com/QHidB1p0c3
— Sanjay Kumar. IAS (@skumarias02) May 21, 2021
Himalayas are visible again from Saharanpur. After rains, the sky is clear and AQI is around 85.
— Ramesh Pandey (@rameshpandeyifs) May 20, 2021
PC: Dr Vivek Banerjee #lockdown pic.twitter.com/yR6buvfX6k