― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுஆண்மையைப் பெருக்கும் இயற்கை வயாகரா!

ஆண்மையைப் பெருக்கும் இயற்கை வயாகரா!

- Advertisement -
Drumstick flower

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.
இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர்.

இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.

முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

கர்ப்பப் பை பிரச்னை, கருமுட்டைக் குறைபாடு, குழந்தையின்மைப் பிரச்னைகளுக்கு முருங்கைப் பூ நல்ல பலனளிக்கும்.

ஆண்மை அதிகரிக்கும் தாது, முருங்கைப்பூவில் அதிகம் இருக்கிறது. நன்கு காய்ச்சிய பசுவின் பாலில், முருங்கைப்பூக்களை போட்டு தினமும் குடித்து வந்தால், தாது பலம் பெறும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். நீர்த்துப்போன விந்து கெட்டியாகும் . இதை இயற்கையின் வயாகரா எனக்கூறலாம். முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

​ஆண்மை கோளாறு
குழந்தையின்மை பிரச்சனையில் ஆண்களும் பாதிப்பை கொண்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு உண்டாகும் கோளாறுகளை நீக்கவும், அல்லது வராமல் தடுக்கவும் முருங்கைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும். ஆண்மை கோளாறு இருப்பவர்கள் முருங்கைப்பூவை எப்படி சாப்பிடவேண்டும் என்று தெரிந்துகொள்வொம்.

எப்படி எடுத்துகொள்வது
முருங்கைப்பூவை சுத்தம் செய்து நிழலில் காயவைத்து எடுக்கவும். அவை நன்றாக காய்ந்ததும் அதை மிக்ஸியில் பொடியாக்கி கண்ணாடி பாட்டிலில் வைத்து தினமும் காலை இரண்டு டீஸ்பூன் தேனில் ஒரு டீஸ்பூன் அளவு முருங்கைப்பூ பொடியை சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும்.

​விந்து முந்துதல் பிரச்சனைக்கு
தாம்பத்திய வாழ்க்கையின் போது ஆண்கள் சந்திக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சனை விந்துமுந்துதல். விந்து முந்துதல் பிரச்சனையால் தாம்பத்திய வாழ்க்கையில் குறைபாட்டை கொண்டிருக்கும் ஆண்களுக்கு சிறந்த தீர்வாக இருக்க கூடியது முருங்கைப்பூ பாதாம் சேர்த்த பால்.

எப்படி எடுத்துகொள்வது
4 அல்லது 5 பாதாமை 8 மணி நேரம் நீரில் ஊறவிடவும். அதை தோல் உரித்து வைக்கவும். முருங்கைப்பூவை சுத்தம் செய்து கைப்பிடி அளவு எடுத்து தோல் உரித்த பாதாமுடன் சேர்த்து அம்மியில் மைய அரைக்கவும். இதை ஒன்றரை டம்ளர் பசும்பாலில் சேர்த்து ஒரு டம்ளராக சுண்டும் வரை வைத்திருந்து இனிப்புக்கு நாட்டு சர்க்கரை அல்லது பனங்கருப்பட்டி சேர்த்து கொடுக்கவும். ஒரு மண்டலம் வரை குடித்து வர வேண்டும். தினமும் இரவில் கொடுக்கலாம். சில வாரங்களிலேயே நல்ல பலன் கிடைக்கும்.

​விந்தணுக்கள் உற்பத்திக்கு
விந்தணுக்களின் எண்ணிக்கை குறையாமல், வீரியம் குறையாமல் வேகம் குறையாமல் ஆரோக்கியமாக இருந்தால் ஆண்மை தன்மையும் சீராக இருக்கும். குழந்தைப்பேறில் குறைபாடு இருக்காது. அதே நேரம் தற்போது குழந்தையின்மை பிரச்சனையின் போது ஆண்களுக்கு குறைபாடு கண்டறியப்பட்டால் அது பெரும்பாலும் ஆண்களின் விந்தணுக்கள் குறைபாடே காரணமாக சொல்லப்படுகிறது. இந்த விந்தணுக்களை தரமாக மாற்ற உற்பத்தியை பெருக்க முருங்கைப்பூவை கொடுக்கலாம்.

எப்படி எடுத்துகொள்வது
முருங்கைப்பூ – 10
பாதாம் பிசின் – சிறு துண்டு
பாதாம் பருப்பு – 3
சாரைப்பருப்பு – 1 டீஸ்பூன்

பாதாம் பிசினை 10 மணி நேரம் ஊறவைத்தால் அவை பொங்கி நுங்கு போன்று வளர்ந்திருக்கும் அதை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்துகொள்ளவும். 10 மணி நேரம் வரை ஊறவைத்த பாதாம் பருப்பை தோல் உரித்து அதனுடன் பத்து நிமிடம் ஊறவைத்த சாரப்பருப்பு, முருங்கைப்பூ சேர்த்து மைய அரைத்து பாலில் கலந்து ஒன்றரை டம்ளர் ஒரு டம்ளராக வரும் வரை கொதிக்க வைத்து அதில் கலந்து இனிப்புக்கு நாட்டு சர்க்கரை அல்லது பனங்கருப்பட்டி கலந்து குடித்துவந்தால் இயற்கையாகவே விந்தணுக்கள் கெட்டிப்படும். அதிகரிக்கும்.

​கருவுறுதலை ஊக்குவிக்க
குழந்தைப்பேறை எதிர்பார்க்கும் தம்பதியர் இருவருமே முருங்கைப்பூ உணவில் சேர்க்கலாம். இவை எதிர்கொள்ளும் கருவின் பலத்தை உறுதி செய்ய கூடும். ஆரோக்கியமான தம்பதியருக்கு குழந்தைப்பேறில் கால்தாமதம் உண்டாகும் போது இவை உதவும்.

எப்படி எடுத்துகொள்வது
முருங்கைப்பூ – 1 கப்,
சாம்பார் வெங்காயம் – 1 கப்,
வரமிளகாய்-2
உப்பு , நல்லெண்ணெய்/ நெய் – தேவைக்கு

முருங்கைப்பூவை சுத்தம் செய்து ஒன்றிரண்டாக நறுக்கி வைக்கவும் சாம்பார் வெங்காயத்தை தோலுரித்து ஒன்றிரண்டாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் / நெய் விட்டு தாளிப்பு பொருள்கள் சேர்த்து வெங்காயம் , முருங்கைப்பூ சேர்த்து நன்றாக வதக்கி பச்சை வாசனை போனதும் இறக்கவும். இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கருவுறுதல் தாமதிமில்லாமல் உடனடியாக உண்டாக கூடும்.

உடல் சூட்டை தணிக்கவும் முருங்கைப்பூ பயன்படுகிறது. இதை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், சூடு தணியும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கை கட்டுப்படுத்தவும் முருங்கைப்பூ பயன்படுகிறது. முருங்கைப்பூ சாறு, மேகநோயை தணிக்க உதவுகிறது. இதை, துவையல் செய்தும் சாப்பிடலாம்.

மறதியை போக்கவும், நினைவாற்றல் பெருகவும் பயனுள்ள மருந்தாக முருங்கைப்பூ உள்ளது. தேர்வு நெருங்கி வரும் வேளையில், குழந்தைகளுக்கு முருங்கைப்பூ பொரியல் செய்து கொடுப்பது நல்லது. முருங்கைப்பூவில் அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அத்துடன் பனங்கல்கண்டு கலந்து, தினமும் காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால், நினைவாற்றல் பெருகும்.

நாவின் சுவையின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணியாற்றி வருபவர்கள், அலுவலக ஊழியர்கள் பலருக்கு, 40 வயதிற்கு மேலாகி விட்டால், கண்ணாடி அணியாமல் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விடும். பேப்பர் படிக்கக்கூட அவர்களால் முடியாது. இதை, வெள்ளெழுத்து பிரச்னை என்று கூறுவர். இவர்களுக்கு முருங்கைப் பூ, நல்ல பயன் தரும்.

இந்த பூவை, நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வைத்திறன் அதிகரிக்கும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி, தினமும் காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, பார்வைக் கோளாறுகள் நீங்கும். அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும். அவர்கள், முருங்கைப் பூவை கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

உடல்சூடு தணிய

சிலருடைய உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல காணப்படும். அத்தகையவர்கள் ஒரு கைப்பிடியளவு முருங்கைப் பூக்களைச் சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டியளவு அளவு பசு நெய் விட்டு வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை வேளை மட்டும் குடித்து வந்தால் ஏழே நாட்களில் உடல் சூடு தணிந்து சம அளவை அடையும்.

முருங்கைப் பூவை அரைத்து வீக்கங்கள் மீது பற்றுப்போடலாம். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூவை மென்று விழுங்கலாம்.

கண் வலிக்கு

இரவு நேரத்தில் முருங்கைப் பூவை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை பூவின் சாறை 2 துளிகள் வீதம் கண்களில் விட கண் வலிகள் நீங்கும். விரை வீக்கம் சுருங்க முருங்கைப் பூவை அவித்து விரை மீது மூன்று நாட்கள் கட்டினால் நீர் வற்றி சுருங்கி விடும்.

வயிற்று வலிக்கு

பிரண்டை, முருங்கைப் பூ, பொடியாக நறுக்கப்பட்ட தேங்காய் மூன்றையும் வகைக்குக் கைப்பிடியளவு எடுத்து மூன்றையும் ஆவியில் வேகவைத்து அம்மியில் வைத்து நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்துக் குடித்து விட்டால் வயிற்றுவலி நின்றுவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version