கோவையில் ஆர்.எஸ்.எஸ் சேவா பாரதி சார்பில் கோவை GN மில் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனா தனிமைப்படுத்தல் மையம் தொடங்கப்பட உள்ளது.
350 படுக்கை வசதிகளோடு 25 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், 6 நர்ஸ்கள், 2 டாக்டர்கள் உடன் செயல்பட உள்ளது. இது ஆரம்ப நிலை அறிகுறி பாதிப்பு உள்ளவர்கள் தங்க வசதி உள்ளது. அத்துடன், ஆக்சிஜன் குறைபாடு ஏற்படாமல் இருக்க வளாகத்தில் ஆக்சிஜன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தனிமைப் படுத்தல் முகாம், முழுக்க முழுக்க இலவசமாக செயல்பட உள்ளது என்றும், உணவு தங்குமிடம் அனைத்தும் இலவசம் என்றும் தேவையானோர் இதை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அதன் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
RSS started a 350-bed Covid Care Center in Kongunadu Arts and Science College at Coimbatore, Tamil Nadu. Needy people can take admission from tomorrow.