வெளியாகிய அறிவிப்பில், இந்திய துறைமுக ரயில் மற்றும் ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் Company Secretary மற்றும் சில பணிக்கு என்று மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அனுபவம் :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் கட்டாயம் முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் கூடுதல் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க விரும்பும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாறுபட்டுள்ள வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 45 வயது முதல் 63 வயது வரை அதிகபட்ச வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.
ஊதிய விவரம்:
மேற்கண்ட பணிகளுக்கு தேர்வாகும் தகுதி வாய்ந்த நபர்கள் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,40,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள். விரிவான தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்ப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.