இன்று தாக்கல் செய்யப் பட்ட ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவிக்கப்படாதது குறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விளக்கம் அளித்துள்ளார். அதில் ஆய்வுக்குப் பிறகே அறிவிப்பு என்று கூறினார். 2015-16-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில் அறிவிப்பு இல்லாதது குறித்து அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பட்ஜெட் உரையில் கூறியபோது, “புதுப்பிக்கப்பட்டு வரும் ரயில்வே இருப்புப் பாதைப் பணிகள் நிறைவு பெற்றால்தான் புதிய ரயில்களை இயக்குவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள முடியும். ரயில்வே இருப்புப் பாதை அதிகளவில் பயன்படுத்தப்படுவது, புதிய இருப்புப் பாதைகளில் பணிகள் தேக்கமடைந்துள்ளது, வேகக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஆகியன புதிய ரயில்களை அறிவிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. எனவே, இந்த ஆய்வு முடிந்த பிறகு நடப்பு கூட்டத் தொடரிலேயே புதிய ரயில்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்” என்றார்.
To Read this news article in other Bharathiya Languages
ஆய்வுக்குப் பிறகே புதிய ரயில்கள் அறிவிப்பு: சுரேஷ் பிரபு விளக்கம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari