December 5, 2025, 2:41 PM
26.9 C
Chennai

ரஃபேல் விவகாரத்தில் பொய் தகவலா? மோடி, நிர்மலா சீதாராமன் மீது உரிமை மீறல் நோட்டீஸ்

01 July24 Parliment - 2025ரஃபேல் விமானம் பேர விவகாரத்தில் பிரதமர் மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தவறான தகவல்களை கூறியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், இருவரின் மீதும் லோக்சபாவில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

தெலுங்கு தேசம் எம்பிகள் கடந்த 20 ஆம் தேதி லோக்சபாவில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா திர்மானம் கொண்டுவந்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் பிரான்ஸுடன் ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறுகிறார். பிரான்ஸ் பிரதமருடன் நான் பேசியபோது அப்படி எந்த ரகசிய ஒப்பந்தமும் இல்லை என்று கூறினார். ஒரு தொழிலதிபருக்கே ரஃபேல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தத் தொழிலதிபர் ரூ. 45 ஆயிரம் கோடி பலனடைந்துள்ளார். தன் வாழ்நாளில் ஒரு விமானத்தைக்கூட அந்தத் தொழிலதிபர் உருவாக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது ” என்று பிரதமர் மீது கடுமையாக குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை. இந்த ஒப்பந்தம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் போடப்பட்டது” என்று கூறினார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த் ஷர்மா, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் டெல்லியில் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.அந்தோணி கூறுகையில், “ரஃபேல் விமானக் கொள்முதல் விவகாரத்தில் விலையை வெளிப்படையாக அறிவிப்பதற்கு தடையாக ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். அதே போல ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், “பிரதமர் மீதும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும் லோக்சபாவில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர இருக்கிறோம்” என்று தெரிவித்தார். ஆனந்த் சர்மா கூறுகையில், “இது லோக்சபாவில் நடந்தது என்பதால், லோக்சபாவில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருகிறோம்” என்று கூறினார். ராகுல் காந்தி பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் கட்டிப் பிடித்ததற்காகவும் கண்ணடித்ததற்காகவும் பாஜக ராகுல் காந்தி மீது பாஜக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories