இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய திடீர் தாக்குதலில் காஷ்மீரில் 18 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
ஜம்மூ-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் ரோந்து வாகனம் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 44 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டம், அவந்திப்போராவில், ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், 20க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.
தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 18 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 44 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது!