பிரதமர் மோதி “மான்கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். கடந்த முறை பிரதமர் ஆன உடனேயே மோதி வானொலியைத்தான் தேர்ந்தெடுத்தார். நாட்டு மக்களுடன் மனம் விட்டுப் பேசும் மன்கி பாத் மூலம்! இது மனதின் குரல் என தமிழில் வானொலியில் ஒலிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோதி மீண்டும் மான்கி பாத் நிகழ்ச்சியை வரும் 30-ஆம் தேதி முதல் துவங்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, பொதுமக்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை MyGov இணையதளம் மூலம் சமர்பிக்கலாம் என டுவுிட்டர் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.