― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாவைகோ எம்.பி.யாக முடியுமா? முடியாதா?

வைகோ எம்.பி.யாக முடியுமா? முடியாதா?

vaiko 4

திமுக தொடா்ந்த தேசதுரோக வழக்கால் வைகோ எம்.பி.யாக முடியுமா? முடியாதா? என்பது 5-ந் தேதி தீர்ப்புக்கு பிறகு தெரிய வரும்.

திமுக தொடர்ந்த வழக்கால் வைகோ எம்.பி.ஆவதில் சிக்கல்
ஏறபட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற மேல்- சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும் போட்டியின்றி எளிதாக தேர்வு செய்ய முடியும்.

அ.தி.மு.க. சார்பில் பா.ம.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

அந்த இடம் அன்புமணிக்கு வழங்கப்படுகிறது. தி.மு.க.வில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு 1 இடம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ம.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய எழும்பூர் தாயகத்தில் இன்று கட்சியின் உயர் மட்ட குழு கூட்டம் வைகோ தலைமையில் நடைபெறுகிறது.

இதில் ம.தி.மு.க. வேட்பாளராக பொதுச்செயலாளர் வைகோ பெயர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் 2009-ம் ஆண்டு வைகோ பேசிய பேச்சே இன்று அவருக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசில் அங்கம் வகித்த காங்கிரஸ்- தி.மு.க.வுக்கு எதிராகவும்

அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங்குக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா 2009-ம் ஆண்டு எழும்பூர் ராணி சீதை அரங்கில் நடைபெற்றது.

இதில் வைகோ கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார்.

அவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி வைகோ மீது தேசதுரோக வழக்கு தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்டது.

நீண்ட வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் வைகோ முறையிட்டார்.

ஆனால் வழக்கை ‘டிஸ்மிஸ்’ செய்ய முடியாது என்று ஐகோர்ட்டு அறிவித்து விட்டது.

அதன்பிறகு இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற 5-ந் தேதி (வெள்ளிக் கிழமை) வெளியாகிறது.

இதில் வைகோ விடுதலையாகிவிட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது.

மாறாக வைகோவுக்கு 2 ஆண்டுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவரால் எம்.பி. பதவிக்கு நிற்க முடியாது.

இதனால் வைகோ எம்.பி.யாக முடியுமா? முடியாதா? என்பது 5-ந் தேதி தீர்ப்புக்கு பிறகு தெரிய வரும்.

1 COMMENT

  1. தி.மு.க. ஆட்சியில் வை.கோ. மீது தொடர்ந்த தேச துரோக வழக்கின் முடிவு வை.கோ.வுக்கு ஆதரவாக இருந்தால்தான் வை.கோ. ராஜ்யசபாவுக்குள் செல்ல முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version