இந்நிலையில் ராகிமோள் மாயமானது குறித்து நெய்யாற்றின்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ராகிமோளை அகிலேஷ் உள்ளிட்ட மூவர் கொலை செய்து, சடலத்தை வீட்டினருகில் புதைத்தது தெரியவந்தது.
ராகிமோளின் செல்போன் சிக்னலின் வைத்து அவரைத் தேடும் பணி நடந்த போது, அகிலேஷ் வீட்டுக்கு அருகே செல்போன் சிக்னல் கிடைத்ததால் குற்றவாளி சிக்கினார்.
வீட்டினருகே புதைக்கப்பட்ட ராகிமோளின் உடலும் கடந்த 25ம் தேதி தோண்டி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் ராகி மோள் கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரின் கார் என்பதும், அவரும் அகிலேஷும் நண்பர்கள் என்பதும், அகிலேஷ் விடுமுறைக்கு வந்தபோது திற்பரப்பிலுள்ள நண்பரின் காரை எடுத்துச் சென்று கொலைக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து, நெய்யாற்றின்கரை டி.எஸ்.பி. அனில் குமார் தலைமையில் காவல்துறையினர் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சனிக்கிழமை திற்பரப்பு வந்து கொலைக்கு அகிலேஷு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து சென்றனர்.