ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி பகுதியில் உள்ள கிராமங்களில் பசுக்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்கு கடத்தப்படுவதாக தகவல் வந்தது. இதனால் அங்குள்ள கிராம மக்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, ஜலதங்கா என்ற கிராமத்தில் 3 பேர் பசுவின் உடலுடன் இருப்பதாக கிடைத்த தகவலினால் அங்கு சென்ற கிராம மக்கள், அங்கிருந்த 3 பேரை அடித்து உதைத்துள்ளனர்.
தகவலறிந்த காவல்துறையினர் அங்கு சென்று அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக , 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, தேடி வருகின்றனர்.