தசரா திருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்
தில்லியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தில்லியில் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஏதும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க தில்லி நகரத்தின் முக்கிய இடங்களில் சிறப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிற தசரா திருவிழாவினில் ஏதும் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என்பாதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.