தில்லி வன்முறை வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் உசேன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். கொலைக்கான தண்டனை சட்டப்பிரிவு 302 இன் கீழ் தபால்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாலேயே இந்த நடவடிக்கையை ஆம் ஆத்மி கட்சி மேற்கொண்டுள்ளது.
வன்முறைகள் தொடர்பாக தில்லி கஜூரி காஸில் உள்ள ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது உளவுத்துறை அதிகாரி படுகொலை தொடர்பாக 365 மற்றும் 302 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது தொழிற்சாலைக்கும் தில்லி போலீசார் சீல் வைத்திருக்கிறார்கள்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சாந்த் பக் ஏரியாவில், அங்கித் சர்மா என்ற 26 வயது உளவுத் துறை போலீஸைச் சேர்ந்த அதிகாரி, கல்வீசி கொல்லப்பட்டு, சாக்கடைக்குள் வீசப்பட்டுக் கிடந்தார். இந்நிலையில், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகிர் ஹுசைனுக்கு, இந்த கொலையில் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இவரது வீட்டுக்கு அருகேயுள்ள சாக்கடை கால்வாயில் இருந்துதான் அங்கித் சர்மா சடலம் கண்டெடுக்கப்பட்டது.
தாஹிர் உசேன் வீட்டின் மாடியிலிருந்து, பெட்ரோல் குண்டுகள், கற்கள் சிலரால் வீசப்படுவது போன்ற வீடியோ வெளியாகியது. அதில் சிவப்பு ஸ்வெட்டர் போட்டபடி தாகிர் ஹுசைன் நிற்கிறார். கற்குவியல், பெட்ரோல் குண்டுகள் அவர் வீட்டு மொட்டை மாடியில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.இதனை தொடர்ந்து தில்லி போலீசார் தாஹிர் உசேன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தில்லி கலவரத்தை தூண்டியது யார்?.. ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் ஹுசைன் வீட்டில் இருந்து பெட்ரோல் குண்டுகள் கைப்பற்றப்பட்டன… மேலும் கையில் தடியுடன் தனது வீட்டில் உள்ள மாடியில் தாஹிர் ஹுசைன் உலவிக் கொண்டு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது… ஐபி புலனாய்வு அதிகாரி அங்கீத் சர்மா படு கொலையில் தாஹிர் ஹுசைன் சம்மந்தப்பட்டுள்ளார் என்று அப்பகுதி மக்கள் உறுதி செய்துள்ளனர்!
அங்கீத் சர்மாவை அவரது வீட்டுக்கு அருகே வன்முறை கும்பல் அடித்து உதைத்து தூக்கிச் சென்று படுகொலை செய்து சாந்த் பாக் பகுதியில் உள்ள சாக்கடையில் வீசி விட்டு சென்றுள்ள கொலை குற்றவாளிகள் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் ஹுசைன் ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர்…
மேலும் தாஹிர் ஹுசைன் வீட்டில் உள்ள மாடியில் இருந்து வன்முறையை தூண்டும் வகையில் கோஷங்கள் போடப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்… தாஹிர் ஹுசைன் வீட்டு மாடியில் பெட்ரோல் குண்டுகள் அடுக்கி வைத்துள்ள பெட்டிகள் மற்றும் கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது…
படுகொலை செய்யப்பட்ட ஆன்கிட் சர்மாவின் தந்தை தேவேந்திர பேசுகையில்,…. தாஹிர் ஹுசைன் வீட்டு மாடியிலிருந்து கற்கள் வீசி தாக்குதல் நடத்தினார்கள் என்று குறிப்பிட்டார். மேலும், இன்னொரு உடல் கைப்பற்றப்பட்டன என்று கூறியுள்ளார். தில்லியில் திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்கி நடத்தியது ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் ஹுசைன் என்று தெளிவாக தெரிகிறது!