― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்நட்பாகவே பிரிந்துவிட்டாராம்... விவாகரத்து பெற்ற நடிகையின் விளக்கம்!

நட்பாகவே பிரிந்துவிட்டாராம்… விவாகரத்து பெற்ற நடிகையின் விளக்கம்!

கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற சிம்ரன் கன்னா.

அண்மையில் திரைத் துறையில் உறவுகளெல்லாம் நீர்க்குமிழிகளாக மாறி வருகின்றன. எப்போது சேர்ந்து வாழ்வார்களோ… எப்போது பிரிந்து போவார்களோ தெளிவே கிடைப்பதில்லை. புதிதாக மற்றுமொரு நடிகையும்கூட இதையே செய்துள்ளார்.

தெலுங்கு திரைத்துறையில் இந்த விவாகரத்து நாகரீகம் மிகவும் வளர்ந்து விட்டது. மனோஜ், ஸ்வேதா பாசு, அமலாபால் போன்றவர்கள் இதுவரையில் விவாகரத்து வாங்கி விட்டார்கள்.

புதிதாக நடிகை சிம்ரன் கூட கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார். சிம்ரன் என்றால் நம் ஹீரோயின் சிம்ரன் அல்ல… பாலிவுட் சீரியல் நடிகை சிம்ரன் கன்னா.

‘யே ரிஸ்தா க்யா கேஹ்லாதா ஹை’ சீரியலில் காயத்ரியாக நடிகை சிம்ரன் நடித்து ரசிகர்களிடமிருந்து நல்ல ஆதரவை பெற்றுள்ள பாப்புலர் நடிகையாக மாறினார். இன்னும் சில ஹிந்தி சீரியல்களிலும் நடித்து மகிழ்வித்தார்.

புதிதாக மன வேறுபாட்டால் கணவரிடமிருந்து சிம்ரன் கன்னா பிரிந்து விவாகரத்து பெற்றுள்ளார். தாங்கள் இருவரும் நட்பாகவே பிரிந்து உள்ளோம் என்றார். இருவருக்கும் இடையில் எப்படிப்பட்ட பகையும் இல்லை என்றும் தம் வழிகள் வேறு வேறு ஆதலால் பிரிந்து விட்டோம் என்றும் சிம்ரன் கூறியுள்ளார். மேலும் தன் மகன் தன் கணவரிடமே இருப்பான் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார் சிம்ரான் கன்னா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version