அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! தொற்று உறுதியானது எப்படி தெரியுமா?!

Published:

thangamani admk minister

தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சருக்கு தொற்று கண்டறியப்பட்டது எப்படி என்ற தகவல் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதை அடுத்து, சென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் தங்கமணி அனுமதிக்கப் பட்டார். இதை அடுத்து, தற்போது நடைபெறும் முதலமைச்சர், மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் சந்திப்பில் தங்கமணி கலந்து கொள்ளவில்லை.

அதே நேரம், நாமக்கல்லில் உள்ள தங்கமணியின் அலுவலகம் மூடப்பட்டது. சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் தங்கமணிக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வரும் நிலையில், தங்கமணிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட விதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் சென்னை வருவதால் அவருடன் ஆலோசனையில் ஈடுபட உள்ள அனைவருக்கும் நேற்று கொரனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் தான் அமைச்சர் தங்கமணிக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அமைச்சர் தங்கமணி கொரோனா அறிகுறி எதுவும் இல்லாமல் இருந்துள்ளாரா அல்லது, அறிகுறி ஏதும் இருந்து அஜாக்கிரதையாக இருந்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அமைச்சர் உடனான கூட்டத்தை அடுத்து இப்படி பரிசோதனை செய்யப்பட்டு மாநில அமைச்சருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

Related articles

Recent articles

spot_img