தமிழகத்தில் இன்று 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்தனர். அதே நேரம், இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,054ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,08,649ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். இதை அடுத்து, இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,50,680 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்தனர் இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,159ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 32 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 67,492 மாதிரிகள் சோதனை செய்யப் பட்டுள்ளன. இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 32,40,339 என சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்..: