சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. அதில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதில் கடந்த 7ம் தேதி அகரத்தில் நடைபெற்ற பணியின்போது 5 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்கபட்டிருந்தது. இதன் ஒரு உறை என்பது முக்கால் அடி உயரமும், இரண்டு அறை அடி அகலமும் கொண்டுள்ளது.
மொத்தம் 5 உறைகள் கொண்ட கிணறு கண்டுபிடிக்கபட்ட நிலையில், இன்று மேலும் 6 உறைகள் சேர்த்து 11 உறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, பண்டைய தமிழர்கள் தண்ணீரை அதிக அளவில் எடுக்க உறை கிணற்றை பயன்படுத்தியிருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.