திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே புதிதாக கட்டப்பட்டு இருந்த கள்ளிக்குடி ஒருங்கிணைந்த வேளாண் வணிக வளாகம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சுமார் 200 கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் , மணிகண்டம் சேர்மன் கமலம் கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்
இதில் கள்ளிக்குடி K.S சுந்தரம், மணிகண்டன் என்பவரின் A உழவர் உற்பத்தியாளர் குழு என்ற கடையைத் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்!