யோகா செய்யும் போது யோகா குரு பாபா ராம்தேவ் யானையிலிருந்து விழுந்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்தச் சம்பவம் திங்களன்று ராம்தேவ் மதுராவில் உள்ள குரு ஷரணனின் ஆசிரம ராமநார்தியில் சீடர்களுக்கு யோகா பயிற்சி கற்பித்தபோது நடந்ததாகக் கூறப்படுகிறது. 22 விநாடிகள் கொண்ட வீடியோ செவ்வாய்க்கிழமை வைரலானது.
பாபா ராம்தேவ் யானை மீது அமர்ந்து யோகா ஆசனம் செய்வதைக் காட்டும் அந்த வீடியோ க்ளிப்பில், சில வினாடிகள் அவர் யோகா செய்வதைக் காட்டுகிறது! அப்போது யானை அங்கும் இங்கும் நகர்கிறது. இது ராம்தேவின் யோக அமர்வு சமநிலையைத் தொந்தரவு செய்கிறது! இதை அடுத்து சமநிலை இழந்து, அவர் தரையில் குதிக்கிறார். தரையில் குதித்த நிலையில் இருந்து உடனே எழுந்து ஒரு உதறு உதறிக் கொண்டு வெட்கத்தில் சிரித்தபடியே வருகிறார்.
வைரல் வீடியோவை இங்கே காண்க:
இந்த வீடியோ ட்விட்டரில் ஆயிரக்கணக்கான பார்வைகள் பெற்றது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலவிதமான எதிர்வினைகளை ஆற்றினர். ஒரு பயனர், “வெளிப்படையாக யோகாவை சரியாக கற்பிக்கவில்லை” என்று கூறினார். இன்னொருவர் “… விரைவாக ஜம்ப் செய்து எழுந்து திரும்ப பாபா ராம்தேவ்வால் மட்டுமே முடியும்!” என்று கருத்து தெரிவித்தார்.
“இன்னொருவர் ” அவர் குதித்தார், விழவில்லை. ” என்று எழுதினார்.
முன்னதாக கடந்த ஆகஸ்டில், அவர் மழை நாளில் சைக்கிள் ஓட்டும்போது ஒரு திருப்பத்தில் சைக்கிளில் இருந்து வழுக்கி சறுக்கி கீழே விழுந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. காண்க: