― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்மாமனுக்கு பெண் பார்க்கச் சென்ற தாய்! தாத்தாவுடன் தனித்திருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை!

மாமனுக்கு பெண் பார்க்கச் சென்ற தாய்! தாத்தாவுடன் தனித்திருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை!

- Advertisement -
vankodumai

சென்னை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை எம்ஜிஆர் நகரில் வசித்து வரும் 36 வயதான இளம்பெண் ஒருவர் வியாசர்பாடியில் இருக்கும் தனது சகோதரர் வீட்டிற்கு, 10 வயதான மகளை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

தனது சகோதரருக்கு பெண்பார்க்கும் நிகழ்விற்காக சகோதரருடன் வெளியே சென்ற அவர், சிறுமியை அவரது தந்தையிடம் விட்டு விட்டு சென்றிருக்கிறார்.

அவரது பெயர் டேவிட்(60). தனது மகள் வெளியே சென்றவுடன் சிறுமிக்கு டேவிட் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

சிறுமியின் தாய் வீடு திரும்பிய போது சிறுமி அழுது கொண்டே இருந்துள்ளார். அவரிடம் விசாரித்த போது, தாத்தா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருக்கிறார்.

ஆத்திரமடைந்த சிறுமியின் தாய், தனது தந்தை மீது எம்.கே.பி நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறும் காவல் நிலையத்தில் கோரியிருக்கிறார்.

இதையடுத்து, பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version