இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்ற முடிவு செய்துள்ளதாக இந்திய-பாகிஸ்தான் ராணுவங்கள் நேற்று முன்தினம் கூட்டாக அறிவித்தன.
இந்த உடன்படிக்கையை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், ‘எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகக் கடைபிடிப்பதாக இருநாட்டு ராணுவங்களும் அறிவித்துள்ளன.
இதே பாணியில் அனைத்து பிரச்னைகளையும் பேச்சு வார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் தயாராக உள்ளது.
We also demonstrated to the world Pakistan’s responsible behaviour in the face of India's irresponsible military brinkmanship, by returning the captured Indian pilot. We have always stood for peace & remain ready to move forward to resolve all outstanding issues through dialogue.
— Imran Khan (@ImranKhanPTI) February 27, 2021