இளம்பெண் ஒருவர் பைக்கில் ஆபத்தான வகையில் சென்றபடி சாகசம் செய்த வீடியோ வைரலானதை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத் நகரத்தின் பர்டோலி எனும் பகுதிக்கு அருகில் உள்ள பபென் எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் பின்சி பிரசாத். இருசக்கர வாகனங்கள் அதீத ஆர்வம் கொண்ட பின்சி பிரசாத் அண்மையில் கேடிஎம் ஆர்சி மற்றும் கேடிஎம் ட்யூக் பைக்குகளைக் கொண்டு சாகச பயணம் செய்ததாகக் கூறப்படுகின்றது.
அதனை அவர் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர் செய்துள்ளார். அவரை பின்தொடரும் அவரது ரசிகர்கள் அதனை வைரலாக்கியுள்ளனர்.
அதில் பைக் ஓட்டும் அந்த பெண் அதீத வேகத்தில் செல்லும் போது புள்ளிங்கோக்கள் பாணியில் கைகளை விட்டு இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, சர்ட் காலரை தூக்கிவிடுவது என பல்வேறு சாகசங்களை செய்துள்ளார்.
இது போன்ற ஆபத்தான முறையில் சாலை விதிகளை மீறி செய்யப்பட்டதால் அந்த பெண் மீது காவல்த்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொது சாலையில் வைத்து ஸ்டண்ட் செய்தது, பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கொரோனா காலத்தில் மாஸ்க் அணியாதது மற்றும் விதிக்கப்பட்ட வேகத்தையும் கடந்து இருசக்கரம் இயக்கியது என பல்வேறு பிரிவுகளின்கீழ் இளம்பெண்மீது காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.