தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி குறித்து ஆ ராசா மிகவும் அருவருக்கத்தக்க ஒரு வன்மத்தை கொட்டி இருப்பது, தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான் அப்படி பேசவே இல்லை என்று ஆ ராசாவும், ஸ்டாலினும் அளித்த விளக்கம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மக்கள் என்ன முட்டாள்களா? இது யாரை ஏமாற்றும் வேலை., திமுகவனின் இந்த ஆணவம் நல்லதுக்கு அல்ல என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும்,”உண்மையில் ஆ ராசா உத்தமனாக இருந்தால்., அப்படி சொல்லவில்லை என்றால்., திமுக தலைவர் மு க ஸ்டாலின் முழு காணொளியும் இதுதான்., பாருங்கள்., என்று தமிழக மக்களுக்கு போட்டுக் காட்டி இருக்க வேண்டும்.
திமுகவுக்கு தமிழகத்தில் இல்லாத ஊடகமாக., ஓடும் 40 தொல்லை காட்சிகளில் உங்களுக்கு எத்தனை உள்ளது என்று தமிழகத்துக்கே தெரிந்தது தானே.,
ஏதேனும் ஒரு ஊடகத்தில்., ஒட்டி வெட்டதா அந்த காணொளியை வெளியிட்டு., இதுதான் அவர் பேசியது என்று விளக்கம் அளித்து இருக்கலாம்.
ஆனால், உண்மை என்னவென்றால் ஆ ராசா அப்படி பேசியது உண்மை. திமுகவுக்கு இந்த தேர்தல் நேரத்தில் இது பெரும் தலைகுனிவு என்பதால், அதனை மூடி மறைக்கவே வெட்டி ஒட்டி விட்டார்கள் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின்- ராசாவும் விளக்கம் அளித்துள்ளனர்.
எங்களை யாரும் கேட்கமுடியாது., நாங்கள் சொல்வது தான் உண்மை., நம்பினால் நம்புங்கள்., நம்பாவிட்டால் கிளம்புங்கள்., எங்களை எவனும் கேள்வி கேட்க முடியாது., என்பது போன்ற உச்சக்கட்ட ஒரு ஆணவத்தில்., ஏழு கோடி தமிழக மக்களை ஏமாற்றும் நிலையில் திமுக ஈடுபட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் மு க ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து, ஆ ராசாவை கட்சியிலிருந்து நீக்கி, இனி இதுபோன்று வார்த்தைகள் யாரும் திமுகவினர் பேசக்கூடாது என்று தெரிவித்திருந்தால், திமுகவிற்கு இது ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
ஆனால், அதனை மறைப்பதற்கும், அவரை காப்பாற்றுவதற்கும் இப்படி ஒட்டு., வெட்டு., என்றால்., ஒட்டாமல்., வெட்டாமல் உள்ள வீடியோவை முழு ஆதாரத்துடன் வெளியிட்டு இருக்கலாம்., ஏன் வீடியோ ஆதாரத்தை வெளியிடவில்லை என்றால், அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அந்த முழு வீடியோவையும் பார்த்தாலும் ஆ ராசா அதை தான் பேசி இருப்பார்.” என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் திமுகவை வருத்து எடுத்து வருகின்றனர்.