திருமலை ஏழுமலையானுக்கு ரூ.24 லட்சம் மதிப்புள்ள பேருந்து நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருமலை ஏழுமலையானுக்கு சென்னை அசோக்லேலண்ட் நிறுவனம் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 34 இருக்கை வசதியுள்ள பேருந்து ஒன்றை சனிக்கிழமை நன்கொடையாக வழங்கியது.
இதை அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி மோகன் ஏழுமலையான் கோயில் முன்பு தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினார்.
பேருந்திற்கான ஆவணங்கள், சாவி உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் பேருந்தை மலா்கள், மாவிலை, வாழைக்கன்றுகள் கட்டி, சந்தனம் குங்குமம் இட்டு அலங்கரித்து பூஜை செய்தனர்.