கிணற்றின் அருகே நின்ற சிறுவன், தரை பிளந்து மண்ணில் புதைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், மல்லல் குளம் அருகே, ஊராட்சிக்கு சொந்தமான வட்டக்கிணறு உள்ளது.
கிணற்றை சுற்றி பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால், பிளாட்பார தரை ஈரப்பதமாக இருந்தது. நாகராஜ் — குணாதேவி தம்பதியின் மகன் சுகனேஷ், 12; ஆறாம் வகுப்பு மாணவர்.
நேற்று மாலை, 5:45 மணிக்கு, கிணற்றை சுற்றியுள்ள பிளாட்பாரத்தில் சுகனேஷ் நடந்து சென்றபோது, தரை திடீரென பிளந்து, 15 அடி ஆழத்திற்கு மண் சரிவு ஏற்பட்டது. இதில், அவர் உள்ளே விழுந்து மாயமானார்.
கிராம மக்கள், உத்தரகோசமங்கை போலீசார், மண் அள்ளும் இயந்திரம் மூலம் மணலை தோண்டினர்.நேற்று இரவு வரை தோண்டியும், சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவனை தேடும் பணி, இயந்திரங்கள் உதவியுடன் நடக்கிறது.