தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், டாக்டர் என்பதால், தொடர்ந்து கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.’
வாழ்வாதாரத்தை விட, உயிர் முக்கியம்’ன்னு அவர், ‘ட்விட்டர்’ பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுக்கு, பதில், ‘ட்விட்’ போட்ட இளைஞர் ஒருவர், ‘உங்கள் மூன்று மாத சம்பளத்தை, ‘பிஎம் கேர்’ நிதியாக கொடுங்க’ன்னு சொல்லியிருக்காரு…
அதுக்கு பதிலடியாக தமிழிசை, ‘சம்பளத்தில் மாதம் தோறும் ஒரு லட்ச ரூபாய் என, இதுவரை, 12 லட்ச ரூபாயை, பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி இருக்கிறேன்… தெலுங்கான முதல்வர் நிதிக்கு, ஒரு மாத சம்பளத்தை முழுமையாக வழங்கி இருக்கேன்’னு சொல்லியிருக்காங்க…!