உங்களின் தகவல்களைத் திருடும் மொபைல் ஆப்களை உடனடியாக டெலீட் செய்யும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களில் நமக்குத் தேவையான பல்வேறு வகையான செயலிகள் உள்ளன. அவற்றில் நன்மை இருப்பது போல, தீமையும் உள்ளது. ஆம், சில மொபைல் ஆப்களில் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாகக் குற்றாச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கின்றன.
இந்த மாதிரியான ஆபத்து நிறைந்த மொபைல் ஆப்கள் தடை செய்யப்பட்டும் வருகின்றன. ஆனால், ஒரு ஆப் போனால் இன்னொன்று புதிதாக வருகிறது. அந்த வகையில் ஆபத்து நிறைந்த மொபைல் ஆப்களின் பட்டியலை செக் பாயிண்ட் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு டஜன் மொபைல் ஆப்கள் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக மொபைல் போனிலிருந்து டெலீட் செய்யும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் சுமார் 100 மில்லியன் பயனாளர்கள் இந்த அச்சுறுத்தல் நிறைந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
செக் பாயிண்ட் ரிசர்வ் நிறுவனம், மிகவும் அச்சுறுத்தல் நிறைந்த மூன்று செயலிகளை குறிப்பிட்டுள்ளது.
ஜோசியம் சார்ந்த ஆஸ்ட்ரோ குரு (Astro Guru),
டாக்ஸி சேவை வழங்கும் டி லேவா (T’Leva), லோகோ டிசைன் செய்யும் லோகோ மேக்கர் (Logo Maker)
ஆகிய மூன்று செயலிகளையும் உடனடியாக டெலீட் செய்ய வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் லேவா ஆப் மட்டும் 50,000க்கும் மேற்பட்ட பயனாளர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.