டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக கிறிஸ்துவ மதபோதகர்: இந்து முன்னணி கண்டனம்!

tnpsc
tnpsc

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கிறிஸ்துவ மதபோதகர் ஒருவரை உறுப்பினராக நியமனம் செய்ததற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு தேர்வாணையத்தில் உறுப்பினராக ஒரு மத போதகரா? அரசின் நோக்கம் என்ன?

தமிழக அரசு தேர்வாணையத்தில் கிறிஸ்தவ பாதிரியார் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதை இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் மிக கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

கிறிஸ்தவ மதத்தின் போதகரான பாதிரியார் எவ்வாறு நடுநிலையாளராக இருக்க முடியும்?  இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த கட்சியும் செய்ய துணியாததை திமுக அரசு செய்வதன் உள்நோக்கம் என்ன என இந்து முன்னணி கேட்கிறது. 

பொதுவாகவே திமுக அரசு பதவியேற்றதில் இருந்தே கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் முக்கிய பதவிகளில் நியமித்து வருகிறது.  திமுக தேர்தலுக்கு முன் எங்கள் கட்சியில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என கூறி, வென்ற பின்பு பெரும்பான்மை இந்துகளை அச்சுறுத்தும் வகையில் கிறிஸ்தவ, முஸ்லிம் மதவாதிகளை முக்கிய அரசு பொருப்பில் நியமிக்கிறது. 

ஏற்கனவே தமிழக அரசு பாடநூல் நிறுவனத்திற்கு ஆபாச பேச்சாளரான கிறிஸ்தவர் லியோனியை நியமித்து வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. 
இந்து மதத் தலைவர்களை இது போல உயர் பதவிகளில் நியமிக்கும் தைரியம் இந்த அரசுக்கு இருக்குமா? அவ்வாறு நியமித்திருந்தால் எத்தகைய கண்டனங்களை இந்த அரசு எதிர்கொண்டிருக்கும்.

தற்போதைய இந்த கிறிஸ்தவ மத போதகர் நியமனம் என்பது, இந்த அரசு மதசார்பற்ற அரசு அல்ல, இது கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்கு மட்டுமே ஆன அரசு என்பதை உறுதிப் படுத்தியுள்ளது என‌ மக்கள் நினைக்கின்றனர்.

இத்தகைய மத சார்புடைய நியமனங்களை தமிழக அரசு முக்கிய கொள்கையாக கொண்டு செயல்படுவதை இந்து முன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.  அரசுப் பணிகளில் மதவாத நியமனங்களை இரத்து செய்ய வேண்டும் என  இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories