புனேவை சேர்ந்த பெண் ஒருவர் குடித்துவிட்டு மதுபோதையில் நடு ரோட்டில் படுத்து தூங்கிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
புனே திலக் சாலையில் உள்ள ஹிராபாக் சாலையில் இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் நடந்துள்ளது.
அதிக போதையில் இருந்த அந்த இளம் பெண், சிவப்பு நிற மேலாடை மற்றும் கருப்பு ஜீன்ஸ் அணிந்திருந்தநிலையில், மது போதையில் சாலையில் படுத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வது, சத்தம் போடுவது என போக்குவரத்துக்கு இடையூறு செய்துள்ளார்.
பல பயணிகள் அந்தப் பெண்ணை சாலையிலிருந்து ஒதுங்கி செல்லும்படி கேட்டனர், ஆனால் பயனில்லை. அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
எனினும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததும், அந்த பெண் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார். இதற்கிடையே, இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
पुण्यात मद्यधुंद तरुणीचा हंगामा, टिळक रस्त्यावरील हिराबाग चौकात रस्त्यावर झोपून वाहतूक अडवण्याचा प्रयत्न pic.twitter.com/GgfoHlf0jo
— Anish Bendre (@BendreAnish) August 4, 2021
A drunk girl in Pune sitting in the middle of the road 😱
— Varun Bahl🇮🇳 (@bahl65) August 4, 2021
Video from @IndiaToday pic.twitter.com/7DTiIV9JEs