மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேற்று சந்தித்து ஆசி பெற்றார்.
காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமி மணி மண்டபத்தில், காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடித்து வருகிறார்.
மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன், சுவாமியை நேற்று சந்தித்து ஆசி பெற்றார். உடன் மாவட்ட பா.ஜ.., தலைவர் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அப்போது விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ”ராமேஸ்வரம் முதல் காசி வரை, காஞ்சிபுரம் வழியாக ரயில் சேவை துவக்க வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்தார். இது குறித்த மனு, மடத்தின் சார்பில் அமைச்சரிடம் அளிக்கப்பட்டது.