உங்களுக்கு போஸ்ட் ஆஃபீஸில் அக்கவுண்ட் இருக்கு ஆனா ஏடிஎம் கார்டு..,?
தபால் அலுவலகத்தில் அக்கவுண்ட் ஓபன் செய்வது எப்படி எளிதோ அதைவிட எளிது அதற்கான ஏடிஎம் கார்டு வாங்குவது. இதுவரை அஞ்சல் சேமிப்பின் ஏடிஎம் கார்டு வாங்காதவர்களுக்கு இந்த பதிவு கண்டிப்பாக உதவும்.
அதற்கான படிவத்தை முதலில் நீங்கள் நிரப்ப வேண்டும். அந்த படிவம் ஆன்லைனில் கிடைக்கும் அல்லது அருகில் இருக்கும் தபால் நிலையம் சென்றும் வாங்கி கொள்ளலாம்.
அந்த படிவத்தில் கேட்கப்படும் பெயர், வீட்டு முகவரி, அக்கவுண்ட் எண், பான் எண் ஆகியவற்றை நிரப்பி சமர்பித்தாலே போதும் 2 அல்லது 3 நாட்களில் உங்கள் வீடு தேடி ஏடிஎம் கார்டு வந்து விடும்.
கார்டு வாங்கிய பிறகு அதற்கு நீங்கள் 1 வருடத்திற்கு ஆண்டு கட்டணம் கட்ட தேவையில்லை. அதன்பின்பு தான் கட்ட வேண்டும். இந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்.
அதே போல் தபால் நிலையத்தின் ஏடிஎம்மில் இந்த கார்டைப் பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு இலவசமாக 5 முறை வரை பணம் எடுக்கலாம். ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை கார்டில் இருந்து எடுக்க முடியும்.
உங்கள் அக்கவுண்டுக்கு E-banking வசதியை செயல்படுத்த, விண்ணப்ப படிவம் அல்லது இணைய வங்கி படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய, ‘ஏடிஎம் கார்டு / இணையம் / மொபைல் / SMS வங்கி சேவை கோரிக்கை படிவத்தை’ பதிவிறக்கம் செய்ய இ https: / /www.indiapost.gov.in/VAS/Pages/Form.aspx இந்த வலைத்தளத்திற்கு சென்றாலே போதும். அனைத்து வசதிகளும் இங்கே உள்ளது.
இதை தவிர்த்து நீங்கள் RD அல்லது டைம் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்பினால் அதை இணைய வங்கி மூலமாகவும் செய்யலாம். தபால் அலுவலக இணைய வங்கியிடமிருந்து ‘Stop Cheque’ கோரிக்கை அல்லது கால அட்டவணையை தேர்வு செய்யலாம். தகுதியான தொகைக்கு, உங்கள் PPF கணக்கிலிருந்து நிதிகளையும் திரும்பப் பெறலாம்.